அரபு மொழி பலகை அகற்ற வேண்டுமென்பது பொலிஸாருடைய அடாவடி நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாயல்கள், பாடசாலைகள், அரபு கலாசாலைகளில் அரபு மொழி பலகை அகற்ற வேண்டுமென்பது பொலிஸாருடைய அடாவடி நடவடிக்கை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கல்குடா பிரதேசத்தின் காணப்படும் அரபு வாசகங்களை அகற்றுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, நாவலடி, ஏறாவூர், காத்தான்குடி போன்ற பிரதேசத்தில் காணப்படும் பள்ளிவாயல்கள், மதரசாக்களில் உள்ள அரபு மொழியிலான பெயர்…
