Headlines

மைதான சுற்றுவேலிக்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பண நிகழ்வு!!!

தி/மூதூர் மத்திய கல்லூரி பாடசாலையின் மைதான சுற்றுவேலி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (02) இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கம்பரெலிய வேலைத் திட்டத்தின் ஊடாக இக் கட்டிட நிர்மாண நடவடிக்கைகள் சுமார் பத்து இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ் நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள், மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி  அகீதா நஸார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Read More

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் 7324 குடும்பங்களுக்கு புதிய சமுர்த்தி உறுதிப் பத்திரங்கள்

மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கான புதிதாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான சமுர்த்தி நிவாரண உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சமூக நலன் புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இக் குறித்த நிகழ்வு நேற்று (02) மூதூர் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார் மொத்தமாக சுமார் 7324 புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான…

Read More

மனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள்!!!

மனச்சாட்சிகளின் கண்களைத் திறந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள், முடிந்த பின்னும் சிலரின் மனநிலைகள், பழைய பிடிவாதத்திலிருந்து தளர மறுக்கின்றன. இல்லாத குற்றங்களுக்காக எவரையும் தண்டிக்க முடியாது. நாட்டின் எதிர்காலம் சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற நிலைப் பாட்டில் உள்ளோரே ,அப்பாவிகளைக் காப்பாற்றும் இந்த தர்மத்தைத் தகர்த்தெறியப் புறப்பட்டுள்ளனர், உளவுத்துறை, பாதுகாப்புத் துறை,சட்டத்துறை உள்ளிட்ட நாட்டின் சகல துறைகளிலும் இவர்களின் சந்தேகப் பார்வைகள் நுழைந்துள்ளதால், அரச இயந்திரத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. எத்தனை தடவைகள் எடுத்துச் சொன்னாலும்…

Read More

மங்கலகமவில் பாலம் அமைக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி நிதியொதுக்கீடு

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் மங்கலகம பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டத்திட்டத்திற்கு பயணம் செய்யும் பிரதான பாதையில் பாலம் அமைப்பதற்காக முன்னாள் விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களால் 20 இலட்சம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது இதற்கான அடிக்கல் நாடும் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வுக்கு பிரதேச சபை உறுப்பினர் சுனில் பண்டார, நிலைய பொறுப்பதிகாரி பண்டார நிமால், சமன் மங்கலகம…

Read More

விமல், ரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில், முன்னாள் அமைச்சர் றிசாட் வாக்கு மூலம்

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸ்ஸாநாயக்க உள்ளிட்ட இனவாதிகள் சிலர் தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக தன்மீது சுமத்தி வந்த அவதூறுகள் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பொலிஸ் திணைக்களத்தில்  அவர்கள் மீது ஏற்கனவே முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார். அந்த முறைப்பாடு தொடரில் மேலதிக தகவல்களையும் ஆவணங்களையும் வழங்கும் நோக்கில் ரிஷாத் பதியுதீன் இன்று (02) காலை திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவுற்குச் சென்று வாக்கு மூலம்…

Read More

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில் வெல்லாங்குளம் தேவன் பிட்டி கிராம மக்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்வு.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசப்பிரிவுக்கு உட்பட்ட வெல்லாங்குளம் தேவன் பிட்டி கிராமத்தை சேர்ந்த 59 குடும்பங்களுக்கு ரூபாய் 465 000.00/- பெறுமதியில் இலவசமான மின் இணைப்பு மானி பொருத்தும் வேலைத்திட்டத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (2019.07.01) இடம்பெற்றது. மின்னிணைப்பிற்கான காசோலைவழங்கும் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்துகொண்டார். இந்த…

Read More

முசலிப்பிரதேசத்தில் கம்பெரேலியா வேலைத்திட்டம் சம்மந்தமான கலந்துரையாடல்..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் கம்பெரேலிய நிதிஒதுக்கீட்டின் வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று(2019.07.02) முசலி பிரதேச செயலாளர் வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது. கிராமங்களிடையே அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்தும் முகமாக நடாத்தப்பட்ட இக் கலந்துரையாடலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அபிவிருத்தி விடயங்களை கேட்டறிந்து கொண்டதோடு பிரதேசத்தில் நடைபெறும் வேலைத்திட்டங்களை முடிப்பதோடு மேலும் முக்கிய வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பது…

Read More

ஞானசார தேரரின் ஆர்ப்பாட்டத்தை தடுக்காவிட்டால் இத் தனி மனிதன் நாட்டையும், சட்டத்தையும் கையிலெடுக்க சந்தர்ப்பமாக அமையும் ; அப்துல்லா மஃறூப். எம்.பி

ஞானசார தேரர் நாட்டை சீர்குழைப்பதற்கே ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்! பொதுபல சேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரரும் எதிர்வரும் ஏழாம் திகதி இந்நாட்டை சீர்குழைப்பதற்கும், பாரிய ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார். இதனை தடுக்காவிட்டால் இத் தனி மனிதன் நாட்டையும், சட்டத்தையும் கையிலெடுக்க சந்தர்ப்பமாக அமையும் என திருகோணமலை மாவட்ட   நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான  அப்துல்லா மஃறூப் தெரிவித்தார் கந்தளாயில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் திறப்பு விழாவும் அங்குரார்ப்பண நிகழ்வு…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் கந்தளாவில் அபிவிருத்தி பணிகள் அங்குரார்ப்பண நிகழ்வும் திறப்பு விழாவும்..

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் திறப்பு விழா நிகழ்வும் அங்குரார்ப்பண நிகழ்வும் இடம் பெற்றுள்ளது குறித்த அபிவிருத்தி நிகழ்வு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று (30) இடம் பெற்றன. பேராறு இரண்டாம் கொலனி முகைதீன் ஜூம்ஆ பள்ளியின் சுற்று மதில் ஐந்து இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது அஸ்சபா பாடசாலை வீதி சுமார் பத்து…

Read More

வீதி அபிவிருத்திப்பணிகளை ஆரம்பித்துவைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் பேராசியர் இஸ்மாயில்….

சம்மாந்துறையிலுள்ள பல வீதிகள் சீரற்று காணப்படுகின்ற அவலம் செந்நெல் கிராமம் மற்றும் மலையடிக் கிராமம் போன்ற பிரதேசங்களில் காணப்படுவதாக பிரதேசவாசிகள் கௌரவ பராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களிடம் முறைப்பாடு செய்திருந்தனர். அதற்கமைவாக அம்பாறை – 12 ஏ வீதியில் வசிக்கின்ற மக்களில் சிலர் இன்று பாராளுமன்ற உறுப்பினரை நாடி தங்களது வீதியின் அவல நிலை குறித்து கலந்துரையாடிய பின்னர் அவ் வீதிக்கான கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்யும் பணியை கம்பெரலிய வேலைத் திட்டத்தினூடாக துரித…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கந்தளாய் பிரதேச மத்திய குழு தெரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கந்தளாய் பேராரு மேற்கு   பிரதேசத்துக்கான மத்திய குழு தெரிவு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்றது. கட்சியின் தொண்டர்களைக் கொண்ட இக் குழுவானது இன்று (30)  கந்தளாய் ஆயிஸா வித்தியாலயத்தின் மண்டபத்தில் இடம் பெற்ற மத்திய குழு தெரிவில் பல பிரிவுகள் உருவாக்கப்பட்டன. எதிர்கால நடவடிக்கைகள் யாவும் இவ் மத்திய குழு ஊடாக கட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அபிவிருத்திகள் உட்பட…

Read More

பயங்கரவாதம் என்ற விடயத்தில் அதிகம் அடி வாங்கியவன் நான்தான்!- ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன் சாட்சியம்

கடந்த ஆண்டு அக்டோபர் அரசியல் புரட்சியில் ராஜபக்க்ஷ அணியில் இணைந்துகொள்ள எனக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது, அதனை நான் மறுத்தேன். அந்த கோபதாபங்களின் காரணமாகவே என்மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு என்னை ஸஹ்ரானுடன் தொடர்புபடுத்தி பேசுகின்றனர். நானோ எனது குடும்பத்தினரோ பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புபடவில்லை. நான் ஸஹ்ரானை பார்த்தது கூட இல்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் கூறினார், ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு…

Read More