Headlines

ஓமான் – இலங்கை வர்த்தக உறவுகள் தொடர்பில், பேச்சு நடாத்திய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாடு திரும்பினார்”

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஓமான் சென்றிருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று (07) காலை நாடு திரும்பினார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் ஓமானுக்குச் சென்றிருந்த உயர் மட்ட அமைச்சர்கள் குழுவில் அமைச்சர்களான கபீர் காசீம், மலிக் சமரவீர ஆகியோரும் இணைந்திருந்தனர். கடந்த 05ஆம், 06ஆம் திகதிகளில் ஓமானில் இடம்பெற்ற பல்வேறு உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும், பேச்சு வார்த்தைகளிலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றிருந்தனர். இலங்கையிலிருந்து சென்ற அமைச்சர்கள் குழு ஓமான் நாட்டில் கடந்த 05ஆம் திகதி…

Read More

நாட்டில் அமைதி சமாதானத்திற்கான பிரார்த்தனை களமாக புனித நோன்பு காலத்தை பயன்படுத்துங்கள் -இராஜாங்க அமைச்சர் அமீர்அலி

கண்ணியமும் புண்ணியமும் பூத்துக் குலுங்கும் அருள் நிறைந்த அற்புதமான றமழான் நம்மை வந்தடைந்திருக்கிறது. இதனை வரவேற்கும் நாம் இப்புனித நாட்களில் நல் அமல்களில் ஈடுபடுவதுடன்  நாட்டின் அமைதிக்காகவும் சமாதானத்திற்காகவும் சமூகத்தின் நிம்மதிக்காகவும் மக்களின் நல்வாழ்விற்காகவும் பிரார்த்திக்கும் தினங்களாக பிரகடனப்படுத்துவோம். இவ்வாறு இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வெளியிட்டுள்ள புனித றமழான் தினச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். படுபாதகர்களின் ஈனச்செயல்களினால் இந்த நாட்டு முஸ்லிம் சமுகம் வெட்கித்தலைகுனிந்து நிற்கிறது.சுதந்திரத்திற்கு பின்னரும் முன்னரும் தேசப்பற்றாளர்களாகப் பார்க்கப்பட்ட சமூகம் சில கயவர்களினால் தேசத்துரோகிகளாகப் பார்க்கின்ற…

Read More

தங்களின் பொறுப்புகளை ஒவ்வொருவரும் சரியாக புரிந்துவைத்திருக்க வேண்டும் இல்லை என்றால் எதிர்காலத்தில் வெடிக்கவைக்கின்ற ஒரு பொருளாக மாற்றப்படலாம் என இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கணவர் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்று மனைவி தெரிந்திருக்க வேண்டும். மனைவி எங்கிருக்கின்றாள் என்ற செய்தி கணவனுக்கு தெரிய வேண்டும். தங்களுடைய பிள்ளை என்ன செய்கின்றது என்று தாய் தந்தையருக்கு தெரிய வேண்டும். இல்லையென்றால் ஒரு முட்டாளுடைய செயலுக்காக நீங்களும் வெடிக்க வைக்கின்ற ஒரு பொருளாக எதிர்காலத்தில் மாற்றப்படலாம் என விவாசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தையல் பயிற்சி முடித்த 144…

Read More

கர்த்தினால் மல்கம் ரங்சித் பேராயர் அவர்ளுக்கு நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் இராஜாங்க அமைச்சர் அமீர்அலி வேண்டுகோள்.

கர்த்தினால் மல்கம் ரஞ்சித் பேராயர் அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும்.அதற்கான செயற்பாடுகளில் இன்றிலிருந்து நான் இறங்கப்போகின்றேன். என்று கிராமிய பொருளாதார விவாசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் ஏற்பட்ட அந்தக்கொடூரமான சம்பவங்களின் பின்னர் இந்த நாட்டிலே மிகப்பெரிய இனக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை இருந்தது.அந்த நெருக்கடியான சூழலிலும் தனது மக்களின் பாரிய உயிரிழப்புகளையும் தாங்கிக்கொண்டு அமைதி காருங்கள் என்று…

Read More