Headlines

நல்லிணக்கத்திற்கான பாரிய பொறுப்பை சுமந்து பாடுபட ஊடகங்கள் முன்வர வேண்டும் -நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்

மக்களது உள்ளங்களில் இன்றைய சூழ்நிலையில் சந்தேகங்களும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ள நிலையில் சமூகங்களுக்கிடையில் அமைதியும் ஒற்றுமையும் நிலவச் செய்வதற்கு உரிய பங்களிப்பைச் செய்வது ஊடகங்களின் பொறுப்பு என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார் . நிந்தவூர் பிரதேச சபையின் 14 ஆவது அமர்வின் போது(வியாழக்கிழமை-30) அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் மற்றும் புத்தி ஜீவிகளுக்கும் எதிராக சில ஊடகங்கள்…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆரம்பம்!!!

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சருமாகிய அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்றது. குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது கிண்ணியா பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (31) காலை இடம் பெற்றது. அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் உள்ளிட்ட சமூகம் சார்ந்த விடயங்கள் நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ் நிலைகள் பற்றியும் இங்கு எடுத்துரைக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில்…

Read More

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு சுமத்தப்பட்டவை –  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திட்டவட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கொண்டுவரப்பட்டுள்ள சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்ச்சாட்டுக்களும் அடிப்படையற்றது எனவும் அமைச்சர் ரிஷாட்டின் அரசியலை கருவறுப்பதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதிகளாகவே இதனை நாங்கள் கருதுவதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் இன்று (30) மாலை இலங்கை மன்றக்கல்லூரியில் நடத்தப்பட்ட  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கட்சின் முக்கியஸ்தர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான மஹ்ரூப், செயலாளர்…

Read More

நேரடிக்களத்தில் நின்றதற்கா இத்தனை நெருக்குவாரங்கள்?

சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையிலான போருக்குள் முஸ்லிம் சமூகத்தின் தலைமை யொன்றை சில தீய சக்திகள்,திட்டமிட்டு மாட்டிவிட்டுள்ளன.நாட்டின் வரலாறு நெடுகிலும் சாந்தி,சமாதானத்தை அடியொற்றி வாழும் எமது சமூகத்தின் தலைமைக்கு எதிராக கடும்போக்கு சக்திகளும், மதத்தீவிரமும் ஏற்படுத்தியுள்ள இந்த ஆபத்திலிருந்து நாம் கரையேறுவது எப்போது? இந்தக் கடமையைச் செய்யத் தவறினால் எமது எதிர்கால இளம் சமூகம் இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளால் நிர்க்கதியின் விளிம்பில் நிற்க வேண்டிய கதியே ஏற்படப்போகிறது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் கை வைத்து வந்த இந்தக் கடும்போக்குகளுக்கு, அண்மையில்…

Read More

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் உண்மையை கண்டறிய ஒத்துழையுங்கள்!!!

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே சுமத்திக்கொண்டிருக்காமல் உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்புகளை வழங்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஃறூப் தெரிவித்தார். கிண்ணியாவில் நேற்றுமுன்தினம் (27) இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, ஒரு சமூகத்தின் மீதான பழிகளையும் அபாண்டங்களையும் சுமத்துகின்ற சில முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றேன். இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் அமைச்சர்…

Read More

மன்னார் அரிப்பு பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய மக்களுக்கு வாழ்வாதார பொருட்கள்.

கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் அரிப்பு கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய மக்களுக்கான வாழ்வாதார பொருட்கள் மன்னார் முசலி பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.  இவ் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்…

Read More

மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தின் வீதிப்புனர்நிர்மான பணிகள் ஆரம்பம்…

மன்னார் பிரதேசபை உறுப்பினர் மஹிஷா அவர்களின் வேண்டுகோளின் பெயரில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஓதுக்கீட்டில் வீதிப்புனரமைப்புப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்….

Read More

செந்நெல் கிராமத்தில்  அபிவிருத்தி செயற்றிட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமனற உறுப்பினர் இஸ்மாயில் கலந்துகொண்டார்.

தனித்துவிடப்பட்டதும் மற்றும் குறைபாடுடையதுமான கிராமங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டம் இன்று செந்நெல் கிராமத்திலுள்ள ஹிஜ்ரா வித்தியாலத்தில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கௌரவ. எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களின் நெறிப்படுத்தலில் கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. ஏற்கனவே சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் கீழுள்ள கிரமமொன்று இத் திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட போதிலும் மீண்டும் இக் கிராமம் இத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். கிழக்கு மாகாண சபையினால் ஒதுக்கப்பட்ட 10 பிரதேச செயலகங்களுக்கான 100 மில்லியன்…

Read More

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோர வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோர வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கரையோர வீதியானது துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.ஐ.நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க பிரதியமைச்சர் அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களால் இன்று (26) ஞாயிற்றுக் கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மிக நீண்ட கால…

Read More

ஜனாதிபதிக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு திருப்தியளிக்கிறது- இராஜாங்க அமைச்சர் அமீர்அலி

ஜனாதிபதி மைத்திரிபலால சிறிசேனவிற்கும் முஸ்லிம் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் அடங்கலாக அரசியல் பிரமுகர்களுக்குமிடையிலான இன்றைய சந்திப்பு திருப்தியளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.இச்சந்திப்பு இன்று(25) இடம்பெற்றது. ஜனாதிபதியுடனான இந்த முக்கிய சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், எம்.எச்.ஏ. ஹலீம், இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,அலிசாஹிர் மௌலானா, , பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், எம்.ஐ.எம். மன்சூர், காதர்…

Read More

அமைச்சர் ரிஷாட் மீது வேண்டுமென்றே குற்றங்களை சுமத்துவதை விடுத்து,  தீர விசாரித்து உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்பு வழங்குங்கள்; பாராளுமன்றத்தில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கோரிக்கை!

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே சுமத்திக்கொண்டிருக்காமல் ,உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்புகளை வழங்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பாராளுமன்றத்தில் இன்று (21) கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் கூறியதாவது , இந்த சபையிலே ஒரு சமூகத்தின் மீதான பழிகளையும் அபாண்டங்களையும் சுமத்துகின்ற சில முன்னாள் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  நான் ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றேன். இந்த நாட்டின் ஜனாதிபதி ,பிரதமர் மற்றும் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஆகியோர்  அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

Read More

ஒலுவில் துறை முக நிர்மாணிப்பின் போது காணிகளை இழந்தோர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறை முக நிர்மாணத்தின் போது காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது நேற்று (20) திங்கட் கிழமை ஒலுவில் துறை முகத்திலுள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது. மிக நீண்ட காலத்தின் பின் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களினால் முயற்சியின் பலனாக நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்பட்டதாக பயனாளிகள் தெரிவித்தனர். காணிகளை இழந்த…

Read More