Headlines

சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை,  அப்பட்டமான பொய் என ரிஷாட் தெரிவிப்பு!

பயங்கரவாதச் செயல்பாடுகள் எதிலும் தனக்கு எவ்வித தொடர்புமில்லையெனவும் தன்னுடைய சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவோ, விசாரணை செய்யப்படவில்லையெனவும் தெரிவித்த ரிஷாட்பதியுதீன் இது அப்பட்டமான பொய்யென மறுப்புத் தெரிவித்தார். கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் அண்மையில் இடம்பெற்ற கொடூர தாக்குதல் சம்பவத்தை வைத்து சில வங்குரோத்து அரசியல்வாதிகள் ஆதாயம் தேட முனைகின்றனர். இஸ்லாத்துக்கு மிக நெருக்கமான மார்க்கத்தவர்களான கிறிஸ்தவ சகோதரர்கள், படு பயங்கரவாத கயவர்களால் கொல்லப்பட்ட…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது அபாண்டம் சுமத்தும் இனவாத ஊடகங்களை வன்மையாக கண்டிக்கிறோம் – வடமேல் மாகாணசபை உறுப்பினர் எம்.என்.நஸீர்

சமூகவலைத்தளங்கள், தொலைக்காட்சிகளில் இனவாத கருத்துக்களையும் மக்களை குழப்பும் வகையிலான செயற்பாடுகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய விடையமாகும். ” கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களை தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட முற்றிலும் உண்மைக்கு புறம்பான , ஆதாரங்களும் அற்ற செய்தி தொடர்பில் மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தலைவர் என்ற வகையில் எமது மாவட்டம் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். மூவின மக்களோடும் சகிப்புத்தன்மையோடும் , சரியான புரிதலோடும் பேதங்கள் அற்ற முறையில் செயலாற்றுகின்ற தனித்துவமான…

Read More

பயங்கரவாத்தை எந்தச் சமூகமும் வரவேற்காது யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள், அமைச்சர் றிசாத் மீது சேருபூசாதீர்கள்

பயங்கரவாதத் தாக்குதலை நடாத்திய யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து முன்நிறுத்தப்பட்டு அதிக பட்ச தண்டணைகள் வழங்கப்பட வேண்டும் மாறாக முஸ்லீம் சமூகம் மீதும் அமைச்சர் ரிசாத் மீதும் வீண் பழி சுமத்தி அபாண்டத்தை அள்ளிப் போட முடியாது என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய காரியாலயத்தில்  (26) வெள்ளிக் கிழமை காலை இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்…

Read More