தொழில் நுட்ப மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன: மீண்டு கல்வி நடவடிக்கை 29ல்ஆரம்பம்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் பின்வரும் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிலையங்கள் உடனடியாக மூடப்படுவதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை (29)ஆம் திகதி அன்று மீண்டும் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக அவற்றை திறக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை விடுத்துள்ளார். 1- இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை 2- தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை 3- வரையறுக்கப்பட்ட திறன்கள் அபிவிருத்தி நிலையம் 4- இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி…
