Headlines

விலாலோடை அணைக்கட்டு பிரச்சினைக்கு இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தீர்வு

நீண்ட காலமாக நிலவி வரும் விலாலோடை அணைக்கட்டு தொடர்பான பிரச்சினையை ஆராயும் பொருட்டு விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எஸ்.எஸ்.எஸ்.அமீர் அலி இன்று 20.04.2019ம் திகதி சனிக்கிழமை குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்தார். இவ்விஜயத்தின் போது அணைக்கட்டினை நிர்மாணிப்பதற்கான திட்டயறிக்கையை மேற்கொள்ளுமாறு மாவட்ட நீர்ப்பாசன பொறியியளார் எம்.அஸ்ஹருக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்தார். இதனடிப்படையில், ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையினைச் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாக இராஜாங்க அமைச்சரிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது. திட்டறிக்கை கிடைக்கப்பெற்றதும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கான…

Read More

பாராளுமன்றில் இருக்கும் 226 பேரும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்களது ஒருமாத சம்பளத்தை தியாகம் செய்ய முன்வரவேண்டும்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது ஒரு மாத சம்பளத்தை அன்பளிப்பு செய்கின்றேன். அதேபோல் ஜனாதிபதி உட்பட பாராளுமன்றில் இருக்கும் 226 பேரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அன்பளிப்பு செய்ய முன்வரவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்ரஸ் பிரதித் தலைவரும் அனுராதபுர பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான் தெரிவித்தார். கம்பெரலிய செயற்றிட்டத்தினூடாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் மேற்கொள்ளப்பட்ட நிதியோதுக்கீட்டின் கீழ் இப்பொலோகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பலளுவெவ…

Read More