Headlines

தேர்தல் காலங்களை மட்டும் இலக்காக கொண்டு நாம் பணிபுரிபவர்கள் அல்லர் ! வவுனியா வடக்கு சிங்கள பிரதேசங்களின் வரவேற்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு.

தேர்தல் காலங்களை மட்டும் இலக்காக கொண்டு தமது செயற்பாடுகள் ஒருபோதும் அமைந்ததில்லை எனவும் யுத்த காலத்திலே  உயிரைக்கூட துச்சமென  நினைத்து வன்னி மாவட்டத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் பிரச்சினைகளையும் அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி வந்ததாக  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா வடக்கில் வாழும்  சிங்கள சமூகத்தினர்  இன்று காலை (24) அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு வழங்கிய வரவேற்பின் போது அமைச்சர் இவ்வாறு .  இந்த நிகழ்வில் வடக்கு கிழக்கு பிரதான  சங்க நாயக்க வவுனியா ஸ்ரீ…

Read More

கைவினைஞர்களுக்கு காப்புறுதி திட்டம். மார்ச்சில் நடைமுறைப்படுவதாக அமைச்சர் றிஷாட் அறிவிப்பு!!!

கைவினைத்துறையில் ஈடுபடும் கைவினைஞர்களுக்கு காப்புறுதித்திட்டம் இவ்வருடம்  மார்ச் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதெனவும் இதேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 28000 பேர் இந்த திட்டத்தின்  மூலம் நன்மை அடைவர் எனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைவினைத்தொழில் வரலாற்றில் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்படும் ‘சில்பா சுரக் ஷ ‘ எனும் இந்த காப்புறுதித் திட்டத்தை கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017 ஆம் ஆண்டு முதற்தடவையாக முன்மொழிந்ததாகவும் அமைச்சர் நினைவுப்படுத்தினர். சுதேச கைவினைத் துறையினை போஷித்து…

Read More

அஷ்ஷேக் யாகூப் அவர்களின் மறைவுக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் அனுதாபம்!!!

புத்தளம் கல்விமான் அஷ்ஷேக் யாகூப் அவர்களின் மறைவு தனக்கு ஆழ்ந்த கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.. பன்முக ஆளுமைகொண்ட அவரின் மனிதநேய செயற்பாடுகளை நான் பல சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கின்றேன்.கற்றோருக்குரித்தான எளிமையும் சிறந்த பண்பும் கொண்ட அன்னார் வடபுல அகதி மக்களின் விடிவுக்காக உழைத்தவர். 1990ம் ஆண்டு புத்தளத்தில் தஞ்சம் அடைந்த வடபுல அகதிகளின் நலன்களுக்காக களத்தில் நின்று உதவிஇருக்கின்றார். பல்லாயிரக்கணக்கன மக்கள் ஒரே இரவில் புத்தளத்தில் அடைக்களம் தேடியபோது…

Read More

இலங்கையின் நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம்  உலகளாவிய போட்டிக்கு இலங்கையை தயார் படுத்த அமைச்சு நடவடிக்கை 

பல தசாப்தங்களின் பின்னர் இலங்கையின் புடைவைத் தொழிலையும் நெசவுத்துறையையும் பாரியளவில் மேம்படுத்தும் வகையில் இந்த வருடம் நவீன தொழில்நுட்பங்களை அந்தத்துறையின் விருத்திக்காக புகுத்த கைத்தொழில் வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் கைவினைஞர்களும், நெசவு வடிவமைப்பாளர்களும் உலகளாவிய தொழில்நுறட்பத்துடன் போட்டி போடக்கூடிய வாய்ப்பை அமைச்சு உருவாக்கி வருகிற்து. ‘நெசவுத்தொழிலில் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தி நெசவு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்‘ என்று இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  கைத்தொழில்…

Read More

‘மரம் நடுவோம் சுற்றுச் சூழலை பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் மரம் நடும் நிகழ்வில் என்.எம்.நஸீர்.

மரம் நடுவோம் சுற்றுச் சூழலை பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளின் கீழ் மாகோ, ரந்தனிகம பிரதேசத்தில் மரம் நடும் நிகழ்வொன்று அன்மையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சதொச பிரதித்லைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) கலந்து கொண்டு மரங்களை நட்டுவைத்தார்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்களான ஸரூக் , ரஸ்மின் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் . குளியாப்பிடிய…

Read More

விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனங்களை விரைவு படுத்தக்கோரி ஜனாதிபதி மற்றும் கல்வியமைச்சர் ஆகியோருக்கு நிந்தவூர் பிரதேசசபை தவிசாளரின் கடிதம்

விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை அங்கீகரித்த ஜனாதிபதிக்கும் அத்திட்டத்தை அறிமுகம் செய்த கல்வியமைச்சருக்கும் வாழ்த்துக் கூறியும், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனங்கள் 8 மாதங்களாக தாமதமாகி இருப்பதால் அதனை விரைவுபடுத்த கோரியும் அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்டுகிறது. அந்த வகையில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளார் எம்.ஏ.எம் தாஹிர் அவர்கள் கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். அரச பாடசாலைகளில் வகுப்பறை…

Read More

சந்தைக்கு அரிசியை நேரடியாக விநியோகம் செய்ய கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை

நுகர்வோருக்கு அரிசியை விற்பனை செய்து வந்த கூட்டுறவுச்சங்கங்களின் தொழிற்பாடு மேலும் விஸ்தரிக்கப்பட்டுஇ சந்தையில் அரிசியை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பில் சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது சில முன்னேற்றகரமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன . அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சந்தித்து தமது தொழில் தொடர்பில் எதிர் நோக்கும் கஷ்டங்களை எடுத்துரைத்த போதே துறைசார் அமைச்சர் என்ற வகையில் இவர்களின்…

Read More

மதவாச்சி பிரதேசத்தில் விதிப்புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்…..

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவருமான இஷாக் ரஹ்மான் இன்று மதவாச்சி பிரதேச மக்களின் நீண்டகால பிரச்சினைகளை இருந்த உள்ளக விதிகளை அவரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைத்தார் இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் அபிவிருத்தி சங்க  உறுப்பினர்களும்கலந்துகொண்டனர்….

Read More

தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன்

தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் இன்று (21) தொடக்கம் 28 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற போது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் , அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களும் கலந்துகொண்டார்.

Read More

ஒலுவில் துறைமுகத்திற்கு துறைமுக பிரதி அமைச்சர் விஜயம்

ஒலுவில் துறைமுகத்தின் மூலம் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எந்தவொரு சமூகத்தினருக்கும் பாதிப்பில்லாத வகையில் உடனடியாகத் தீர்த்து வைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விடயங்களை எத்திவைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளைக் கண்டறியும் வகையில் நேற்று(20) மாலை ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு மீனவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும்…

Read More

எம்மில் ஏற்படுகின்ற மாற்றமே சமூக மாற்றத்தைக் கொண்டு வரும் – இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

நாம் என்றும் ஒற்றுமைப்பட்டவர்களாக இருப்போமானால், எங்களுடைய பிரதேசத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செய்வதற்கு இறைவன் வாய்ப்பினைத்தருவான் என விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். மீராவோடை றிழ்வான் பள்ளிவாயலுக்கு அமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து நிறைவு செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (19) இஷாத்தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் அங்கு பேசுகையில், ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள பள்ளிவாயல்கள்…

Read More

மாவடிச்சேனையில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலிக்கு வரவேற்பும் கௌரவிப்பு வைபவமும்

விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களை வரவேற்று கௌரவிக்கும் வைபவம் நேற்று 18.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிச்சேனை வட்டாரக்குழுவின் ஏற்பாட்டிலும் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், அல் இக்ரா விளையாட்டுக்கழகம், டோன் டச் விளையாட்டுக்கழகம், ஸைபுல்லாஹ் தற்காப்புக் கலைக்கழகம் ஆகியவற்றின் பங்குபற்றல் மற்றும் ஒத்துழைப்புடனும் வட்டாரக்குழுத்தலைவர் ஏ.எல். சமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம…

Read More