Headlines

கிராமம் ,நகரம் என்ற பேதமின்றி பாடசாலை வளப்பகிர்வு இடம்பெற வேண்டும்; வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

“பாடசாலைக்கு தேவையான கட்டிடங்களையும் ,வளங்களையும், அடிப்படை தேவைகளையுமே அரசியல் வாதிகளால் பெற்றுத்தரமுடியும். கல்வித்தரத்தை அதிகரிக்க செய்வதும்  மாணவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்றியமைப்பதும்,ஆசிரிய சமூதாயத்தின் பெரும் பொறுப்பாகும்.” இவ்வாறு  அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  வவுனியா முஸ்லிம்  மகா வித்தியாலயத்தில் அதிபர் எம். எஸ் .ரம்சீன் தலைமையில் இடம்பெற்ற மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதம விருந்தினராக இன்று (31)அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார்.  வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களான முத்து முஹம்மது,தாஹிர் மௌலவி, பாரி ,லரிப்…

Read More

வவுனியா குப்பை பிரச்சினையை தீர்க்க அமைச்சரவைக்கு கூட்டு அமைச்சரவை பத்திரம் -அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

வவுனியா பம்பைமடு குப்பை மேட்டு பிரச்சினைக்கு மாற்று  தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் தானும் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் இணைந்து கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து,  பொருத்தமான இடத்தில்  குப்பைகளை கொட்டும் மாற்று திட்டம் ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  வவுனியாவில் இன்று காலை (31)அரச அதிபர் காரியாலயத்தில் அரசாங்க அதிபர் ஹனிபா , மேலதிக அரச அதிபர் மற்றும் நகர சபை,பிரதேச சபை தலைவர்கள் உட்பட அதிகாரிகள் ஆகியோருடன்   இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்…

Read More

கருணாவின் குற்றச்சாட்டு வேடிக்கையானது.கிழக்கு ஆளுநரை நியமித்தது பிரதமர் அல்ல; ஜனாதிபதியே ராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி !!!

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் நியமன விடயத்தில் கருணா அம்மான் சம்பந்தன் ஐயாவையும் சுமந்திரனையும் குற்றம் சாட்டிவருவது வேடிக்கையானது.ஆளுநரை நியமதித்தது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அல்ல.அவரது கட்சியின் தலைவரான ஜனாதிபதியே என கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் விவசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வெல்லாவெளியில் இடம்பெற்ற வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். இவ் வைபவத்தில் முன்னாள்…

Read More

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் – ஹிஸ்புல்லா ஆகியோருக்கு இடையில் பேச்சு!

திருகோணமலையில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்று புதன்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இம்பெற்ற சந்திப்பில், இவர்கள் பேசிக் கொண்டனர். இதன்போது ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய, திருகோணமலையில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிளை விடுவிப்பது தொடர்பில், பிரதியமைச்சர் ஆளுநருக்கு எடுத்துக்…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் வீதிப் புனரமைப்பு பணிகளை திறந்துவைத்தார்…..

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரசேச சபைக்குட்பட்ட துளசிபுரத்தில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான கொங்ரீட் வீதி உட்பட வடிகான் போன்றன நேற்று திங்கட் கிழமை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் கௌரவ அப்துல்லா மஹ்ரூப் அவர்களால் திறந்து மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. இது போன்று கப்பல் துறையில் 450 மீற்றர் தூரமான கொங்ரீட் மற்றும் கிரவல் வீதிகள் செப்பணிடப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. அக்போபுர,நெல்சன்புர வீதி கொங்ரீட் வீதியாக மாற்றியமைத்து பிரதியமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.மக்கள்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் மாகோ, ரந்தனிகம குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் விவசாய கிராமிய பொருளாதார மற்றும் நீர்பாசன கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில். குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) யின் ஆலோசனையில் குருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்களில் உள்ள குளங்களுக்கு நன்னீர் மீன்களை விடும் திட்டம் அன்மையில் ஆரம்பமானது. அதன்படி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாகோ பிரதேசசபை உறுப்பினர் அபூ தாலிபின் வேண்டுகோளுக்கினங்க.இதன் ஆறாவது கட்டமாக மாகோ,…

Read More

பெருக்குவட்டான் பாதைகள் காபட் பாதைகளாக புனர்நிர்மானம்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெருக்குவட்டான் காபட் பாதைகள் காபட்டிடும் வேலை திட்டம் நிறைவு பெற்றுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் அல்ஹாஜ் ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வேளை திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதன்போதும் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி அவர்களும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இலியாஸ் அவர்களும்…

Read More

திருகோணமலையில் பதற்றம்! படையினர் குவிப்பு களத்திற்கு சென்ற பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்!!!

கிண்ணியா கங்கைப் பால கீரைத் தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதால் இரு இளைஞர்களை காணவில்லை என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த மூவரில் இருவர் கடலில் துப்பாக்கிச் சூட்டு நடாத்தப்பட்டதனால் கடலில் பாய்ந்து மூழ்கியுள்ளனர் இதில் ஒருவர் தப்பித்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கடற்படையின் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். காணாமல் போன…

Read More

இஷாக் எம்.பி. யின் நிதியொதுக்கீட்டில் வராகொட மக்களுக்கு குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு.

குடி நீரில் அதிகளவு புலோரைட் பதார்த்தம் அடங்கிய பிரதேசமான அனுராதபுரம் தலாவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வராகொட கிராமத்துமக்கள்மிக நீண்டகாலமாக சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை பெற்றுக்கொள்ளமுடியாமல் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். சுத்திகரிக்கப்படா குடி நீரை பயன்படுத்துவதன் மூலம் சிறு நீரக நோயால் பாதிக்கப்படும் மக்களின் அளவும் அக்கிராமத்தில் அதிகளவாகவே காணப்படுகின்றது. அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுதப்பட்ட நிதியிலிருந்து 2019.01.27 அன்று குறித்த கிராமத்திற்கு குடிநீர் சுத்திகரிப்புயந்திரம் மற்றும் நீர்த்தாங்கிகள் என்பன…

Read More

லங்கா சதொச நிறுவனத்தின் 405 வது கிளை கண்டி அங்கும்பரையில் திறந்துவைப்பு…

லங்கா சதொச நிறுவனத்தின் 405 வது கிளை கண்டி , அங்கும்பரையில், தபால் மற்றும் முஸ்லிம் கலாச்சார அமைச்சர் ஹலீம், மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் NICD நிருவனத்தின் தலைவருமான ஹம்ஜாட்,அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது கண்டி மாவட்ட இணைப்புச்செயளாலரும் லங்கா சதொச  நிருவனத்தின் பணிப்பாளருமான இஸ்ஸதீன் றியாஸ் அவர்களாலும் திறந்து வைக்கப்பட்ட போது…இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உருப்பினர்கள் அமைப்பாளர்கள் ஆதரவாளர்களும்,சதொச  உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர் …

Read More

ஹிப்ளுள் குர் ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் வைபவம்!!!

கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் மனிதாபிமான நிவாரண அமைப்பினர் (HRF) நாடளாவிய ரீதியில் நடத்திய ஹிப்ளுள் குர் ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் வைபவம் கொழும்பு தாமரை தடாக மண்டபத்தில் இன்று (27) நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனு கலந்து கொண்டார். நிறுவனத்தின் ஸ்தாபகத்தலைவர் பிரௌஸ் ஹாஜியாரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கொழும்பு…

Read More

றிப்கான் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்..

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் பணிப்புரையில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற 2019 ஆண்டுக்கான வவுனியா மாவட்ட கிராம மட்டதிலான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது… இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் .மற்றும் அமைச்சரின் பொதுசன தொடர்பாளர் மொஹிடீனும் இந்த நிகழ்வில் கலந்துசிறப்பித்தார்….

Read More