Headlines

கம்பனி பதிவாளர் திணைக்கள நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிப்பு – திங்கள் முதல் அனைத்து நிறுவனங்களும் ஒன்லைனில் பதிவு

கம்பனி பதிவுகளை மட்டுமே ஒன்லைனில் மேற்கொண்டு வந்த கம்பனி பதிவாளர் திணைக்களம்,  எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம்  அந்த நடைமுறையை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வகையில் நிறுவனங்கள், செயலாளர்கள், கணக்காய்வாளர்கள், சங்கங்கள் ஆகியவையும் ஒன்லைனில் பதிவுகளை மேற்கொள்ள எதிர்வரும் திங்கட் கிழமை தொடக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பதிவாளர் திணைக்கள நாயகம் ஆர்.எஸ். சிறிவர்த்தன தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கும் கம்பனி பதிவாளர் திணைக்கள அதிகாரிகளுக்கும்…

Read More

கல்விக்காக அதிக நிதியை ஒதுக்கியுள்ளேன். பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்

தி/கிண்ணியா குறிஞ்சாக்கேணி மகளிர் மகாவித்தியாலயத்தின் தரம் ஒன்றுக்கான 2019 ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு இன்று (17) வியாழக்கிழமை அதிபர் எஸ்.டி.நஜீம் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது பாடசாலை வளாகத்தில் அமையப் பெற்றுள்ள புதிய நவீன வகுப்பறை கட்டிடம் (Smart Class Room) வகுப்பறையும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை…

Read More

மீள்குடியேற்ற அதிகாரம் றிஷாட் பதியுதீனிடம் மீளக்கிடைத்தது!!!

கௌரவ றிசாத் பதியுதீன் அவர்கள் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த காலத்தில் வடபுல முஸ்லிம்கள் சுதந்திரமாக சென்று மீள்குடியேறக் கூடிய சூழல் நிலவவில்லை. முஸ்லிம் மக்கள் வாழ்ந்த பூர்வீகக் கிராமங்கள் விடுவிக்கப்பட்டு இருக்கவில்லை.ஆனால் வன்னி யுத்தத்தால் இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கி இருந்த 300 000 குடும்பங்களை இவரால் குடியேற்ற முடிந்தது. நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தும் என்னால் வடபுல முஸ்லிம்களை கௌரவமாக மீள்குடியேற்ற முடியவில்லையே என்ற கவலை இவரை வெகுவாக வாட்டியது.இவரின் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சர்களாக இருந்தோர்…

Read More

துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படும் ஊழியர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படும். பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்.

இலங்கையில் காணப்படும் துறைமுகங்கள் தெடர்சியான அபிவிருத்திக்கு இட்டுச்செல்லப்படும் துறைமுகங்களில் காணப்படும் ஊழியர்களின் பிரச்சினைகள் உற்பட பல குறைகள் தீர்க்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளனர். துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் உறையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் தொடர்ந்து உறையாற்றுகையில் அம்பாந்தோட்டை கொழும்பு காலி திருகோணமலை போன்ற மாவட்டங்களில் துறைமுகங்கள் காணப்படுகின்றன இவ்வாறான துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படும் நாட்டின் தேசிய…

Read More

அழிந்து போன ஊடகச் சுதந்திரத்தை பாதுகாத்தது நல்லாட்சி அரசாங்கமே!!!

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மஹிந்த ராஜக்ஷ்ச ஆட்சிக் காலத்திலேதான் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும் இருக்கிறார்கள். சில ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டும் இருக்கின்றன. ஆனால் நல்லாட்சிக் காலத்தில் எந்தவொரு ஊடவியலாளரும் கொல்லப்படவோ, கடத்தப்படவோ, தாக்கப்படவோ இல்லை.இதற்கு காரணம் நல்லாட்சி வழங்கிய ஊடகச் சுதந்திரம்தான் என துறைமுகங்கள் கப்பல்துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். கிண்ணியா பிரதேசத்தில்  நேற்றுமுன்தினம் (15)  மக்கள் ஏற்பாடு செய்த பிரதி அமைச்சரை வரவேற்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே …

Read More

கிளிநொச்சி வெள்ளநிவாரணப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை –  சதொச நிறுவனத் தலைவர் விளக்கம்

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு, கொழும்பிலிருந்து 10 லொறிகளில் சசொசவினால் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சதொச நிறுவனத்தின் தலைவர் தாரீக் கலீல் விளக்கமளித்துள்ளார். ஜனாதிபதி  மற்றும் பிரதமர் ஆகியோர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் விடுத்த கோரிக்கைக்கிணங்கவே அமைச்சரின் பணிப்புரைக்கமைய சதொச நிறுவனம் இந்த பொருட்களை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தது. கிளிநொச்சி அரச அதிபர் இந்த பொருட்களை கொள்வனவு…

Read More

நீர்ப்பாசன பொறியிலாளர் அலுவலகம் திறந்து வைப்பதற்கான ஆரம்பக் கூட்டம் அமீர் அலி தலைமையில்..

கல்குடாத் தொகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள நீர்ப்பாசன பொறியிலாளர் அலுவலகத்தின் மூலம் முப்பதாயிரம் ஏக்கர் விவசாய செய்யும் தமிழ் முஸ்லிம் சமூகம் நன்மைபெறப்போகின்றது என்று விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியை மையப்படுத்தி புதிதாக நீர்ப்பாசன பொறியிலாளர் அலுவலகம் திறந்து வைப்பதற்கான ஆரம்பக் கூட்டம் நேற்று (14.01.2019) திங்கள்கிழமை மாலை வாழைச்சேனை கமநல சேவைகள் காரியாலயத்தில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு நீர்ப்பாசன…

Read More