Headlines

பாயிஸ் பவுண்டேசனின் மற்றுமொரு சேவை!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான முஹம்மத் பாயிஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில், கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை செல்லும் சுமார் 1500 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள்  வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் கொழும்பு காரியாலயத்தில் அண்மையில் (30)  இடம்பெற்ற இந்த நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார்.   

Read More

“பெருந்தலைவர் அஷ்ரபின் தேசிய ஐக்கிய முன்னணியின் மறுவடிவம் தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்” – சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜவ்பர்கான் உரை!

மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் 2000ஆம் ஆண்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கதவுகளை மூடிவிட்டு, தேசிய ஐக்கிய முன்னணியை ஸ்தாபித்துவிட்டு சொன்ன விடயம், 2012ஆம் ஆண்டு தேசிய ஐக்கிய முன்னணி தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களுமாய் 40 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறும். அதனூடாக அரசியலமைப்பு மாற்றப்பட்டு சிறுபான்மை சமூகத்தவர் ஒருவர் பிரதமராய் வருவார் என்பதாகும். ஆனால் அவற்றை நிறைவேற்ற தலைவர் இருக்கவில்லை. இதன் அர்த்தம் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸினூடாக தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீனினூடாக நிறைவேறுகிறது என்று அகில…

Read More

முல்லைத்தீவு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில்   துணுக்காய், மாந்தை கிழக்கு, ஓட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1500 குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது. 

Read More

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கை!

நீண்டகாலமாக இடம்பெயர்ந்த யாழ் முஸ்லீம்   மக்களை விரைவாக மீள்குடியேற்ற பொறிமுறை ஒன்றினை தயாரித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட   ஜே   86, ஜே 87 மற்றும் ஜே 88  கிராம சேவையாளர் பிரிவுகளில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டதன் பின்னர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2010ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 8வருடங்களாக நான் எமது மக்களின்…

Read More