அனர்த்தம் தொடர்பாக பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!!!
கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இரு மாவட்டங்களும் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது. அந்தவகையில், கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் (28) இரண்டு மணியளவில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், ரஞ்சித் மத்தும பண்டார, தயாகமகே, அலவத்துவல, இராஜாங்க…
