Headlines

அனர்த்தம் தொடர்பாக பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!!!

கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இரு மாவட்டங்களும் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது. அந்தவகையில், கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் (28) இரண்டு மணியளவில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், ரஞ்சித் மத்தும பண்டார, தயாகமகே, அலவத்துவல, இராஜாங்க…

Read More

மடாட்டுகம பகுதி மக்களுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு!!!

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் வேண்டுகோளிற்கு இணங்க மேர்சி லங்கா நிறுவனத்தின் நிதியொதுக்கீட்டில் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மடாட்டுகம பகுதியில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று அமைத்துக்கொடுக்கப்பட்டது. இது மக்கள் பாவனைக்காக 2018.12.27 அன்று அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த பிரதேச மக்கள், மேர்சி லங்கா நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் எம்.ஆர்.எம். முனாஸ், கெக்கிராவ பிரதேச சபை உறுப்பினர் ஷாலித்த…

Read More

“வடகிழக்கு மக்களின் துயர் துடைக்க இறைவன் எங்களுக்கு சந்தர்ப்பம் தந்துள்ளான்” இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின்பாக முதன்முதலாக வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவருக்கு விவசாய, நீர்பாசனத்தோடு சேர்ந்த கிராமிய பொருளாதார அமைச்சை இந்த அரசாங்கம் எனக்கு வழங்கியமைக்காக இந்த நாட்டின் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டவனாக இருக்கின்றேன் என்று விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். அவர் உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர்,…

Read More