சமகால அரசியல் நிலவரம் குறித்து மக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு!
இலங்கை அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு இன்று (17) மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் பிரதியமைச்சரும் மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டு மக்கள் மத்தியில் விளக்கமளித்தார். மேலும், திடீர் அரசியல் மாற்றம் நிகழ்ந்த நாள்முதல், இன்றுவரை நாட்டில் அரசியல் முன்னெடுப்புக்கள் எவ்வாறு செல்கின்றது,…
