Headlines

கஹட்டகஸ்திகிலிய பாடசாலை சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா!

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் 100 நாளில் 110 விசேட வேலைத்திட்டம் மற்றும் 100 நாளில் 115 அதிரடி வேலைத்திட்டம் என இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்வதற்காய் மிக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் 225 வேலைத்திட்டங்களில் ஒன்றாக, கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட, கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் 2018.10.23 பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் நடப்பட்டது. (ன) 

Read More

அமைச்சர் ரிஷாட் மீது அபாண்டமான பரப்புரைகள்! – ஏ.எச்.சித்தீக் காரியப்பர்!

அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்களில் 800 முஸ்லிம்களுக்கு தொழில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை ஒரு குற்றச்சாட்டாக அமைச்சர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள் அமைச்சரவையில் முன்வைத்தார் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. மேற்சொன்னவாறு கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர் நடந்து கொண்டிருந்தால் அது ஒரு ‘சமூகத் துரோகம்’, ‘காட்டிக் கொடுப்பு ‘என்ற எனது ஸ்திரமான நிலைப்பாட்டுடன் குறித் அமைச்சரவை அமர்வில் கலந்து கொண்ட பல அமைச்சர்களை நான் தொலைபேசியில் தொடர்பு…

Read More

“அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இனம், மதம் கடந்த சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று”-ரிப்கான் பதியுதீன்!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தலைவருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா மாவட்டத்தில் உள்ள பல சிங்கள கிராமங்களுக்கான வேலைத்திட்டங்களை, வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான ரிப்கான் பதியுதீனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கூறியதாவது, இந்த நிகழ்வானது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சேவைகளின் உண்மை நிலையை இலங்கை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டக்கூடியதாக…

Read More

அமைச்சர் ரிஷாட்டை கொலை செய்ய சதி; அவரை வாக்குகளால் பலப்படுத்துவதன் மூலமே அந்த சதிகார்களுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் – மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நஸீர்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய சதி சர்வதேச நாடுகளில் இருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாம் அவரை உங்கள் வாக்குகளால் பலப்படுத்துவதன் மூலமே அந்த சதிகார்களுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் என மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான எம்.என்.நஸீர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பங்கு மிகப்பெரியது. அவருக்கு உயிர் அச்சுறுத்தல்களும்…

Read More