Headlines

வவுனியா, புதிய வேலனர் சின்னக்குளம் கிராமத்தின் பாடசாலை வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா, புதிய வேலனர் சின்னக்குளம் கிராமத்தின் பாடசாலை வீதியின்  புனரமைப்புப் பணியினை, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முகம்மது, இணைப்பாளரும் நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி, மீள்குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் சியாம் ஆகியோர் ஆரம்பித்து வைத்தார்கள். அத்துடன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா வேலனர் சின்னக்குளம் கிராமத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் புதிதாக தோன்றப்பட்டுள்ள கிணற்றின் நிர்மாணப்…

Read More

சம்மாந்துறை அறபா வித்தியாலயத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

சம்மாந்துறை அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சம்மாந்துறை அறபா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் அதிகமானோருக்கு எழுத, வாசிக்க தெரியாமல் இருப்பது என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் வலயக்கல்வி பணிப்பாளரை தொடர்பு கொண்டதோடு, நேற்று (17) அங்கு நேரடியாக சென்றும் பார்வையிட்டிருந்தார். அங்கு சென்று பார்க்கின்ற போது, அம்மாணவர்கள் அவ்வாறு குறை கூறும் அளவிற்கு இல்லை எனவும், அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் உண்மைக்கு புறம்பானது எனவும் குறிப்பிட்டார். மேலும்,…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – கந்தளாய் பிரதேசத்தில் ஆரம்பம்!

51 வது, 52வது, 53வது, 54வது, 55வது, 56வது, 57வது, 58 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், கந்தளாய் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் சட்டத்தரணி மதார் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டார அமைப்பாளர்கள் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, கந்தளாய் பிரதேசத்தில் 07 மில்லியன் ரூபா…

Read More

அனுராதபுர மாவட்ட விகாராதிபதியை சந்தித்த முசலி தவிசாளர்!

முசலிப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட, காயக்குளி சிங்கள கம்மான விகாரையின் பொறுப்பாளரான விகாராதிபதி, அந்த மக்களின் நீண்டகால பிரச்சினையான பாதைகள் இன்னும் சில முக்கிய பிரசினைகள் தொடர்பாக முசலிப் பிரதேச சபை தவிசாளருடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில், கலந்துகொண்ட முசலிப்  பிரதேச சபை தவிசாளர் சுபியான், இந்த மக்களின் பிரச்சினைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருடன் பேசி விரைவில் தீர்த்து தருவதாகவும் வாக்குறுதி வழங்கினார். விகாராதிபதியுடனான சந்திப்பில் மிகவும் பயனுள்ள நல்லபல விடயங்கள் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. …

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – 50 வது திட்டம் ஆரம்பம்!

கிண்ணியா கலாசார மண்டபம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பம்! கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி நோக்கில்.  கிண்ணியா மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கிண்ணியா பிரதான வீதியில் குட்டித்தீவில் கிண்ணியா கலாசார மண்டபம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் 4 மில்லியன் ரூபா செலவில் தடுப்புச்சுவர்…

Read More

“சமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கமாட்டோம்” – அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கிடையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இன்று காலை (18) இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த விடயத்தை திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உலக சந்தையில்,…

Read More