Headlines

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – தம்பலகாமம் பிரதேசத்தில் ஆரம்பம்!

47 வது, 48 வது, 49 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், தம்பலகாமம் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான தாலிப் ஹாஜியார், ரெஜீன், வட்டாரக் குழுத் தலைவர் ஆபிலூன், ரபீக் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது….

Read More

பாணகமுவ பெரிய பள்ளி மக்தப் கட்டிட கட்டுமானப் பணிகளுக்கு நிதியினை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு!

மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவருமான என்.எம். நஸீரின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் கடந்த சில வருடங்களாக குருநாகல் மாவட்டத்தில் பல வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில், ரிதீகம பிரதேச சபை உறுப்பினர் அஸ்ஹரின் வேண்டுகோளுக்கிணங்க பாணகமுவ கிராமத்துக்கான பெரிய பள்ளி மக்தப் கட்டிட கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடைந்த நிலையில் உள்ளது. இந்தக் கட்டிடத்துக்கு அமைச்சின் நிதியிலிருந்து 20,000,00.00 ரூபாய் நிதியினை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு கடந்த…

Read More

“முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் சமூகத்தின் மீதும் தங்கள் பணிகளின் மீதும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்”- தவிசாளர் தாஹிர்!

அதிகமாக முச்சக்கர வண்டிகளை பயணத்திற்காக நமது பெண்களே பயன்படுத்துகின்றனர் அந்தவகையில் நமது பெண் பிள்ளைகளை பாடசாலைகளைக்கும் மாலை நேர வகுப்புக்களுக்கும் முச்சக்கர வண்டிகளில் உங்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் பெற்றோர்கள் அனுப்புகின்றனர், அந்தவகையில் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பு கூற வேண்டியவர்களாக தங்களின் பிள்ளைகள் போல பொறுப்புணர்வுடன் நடாத்துவது ஒவ்வொரு சாரதியின் மீதும் கட்டாயமாகும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார். எம்.எம். தாஜூடீன் அவர்களின் தலைமையில் இன்று(7) நடைபெற்ற நிந்தவூர்…

Read More

ரிஷாட் பதியுதீன் கிரிக்கட் கிண்ண சுற்றின் பரிசளிப்பு விழா!

புத்தளம், வேப்பங்குளம் 04 ஆம் கட்டையில் இடம்பெற்ற, ரிஷாட் பதியுதீன் கிரிக்கட் கிண்ண சுற்றின் இறுதிப் போட்டிப் பரிசளிப்பு விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அந்-நூர் விளையாட்டுக் கழகத்துக்கு வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார். தௌபீக் மதனியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதி அமைச்சர் அமீர் அலி, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் உள்ளிட்ட…

Read More

இஸ்மாயில் எம்.பி தலைமையில் சம்மாந்துறையின் அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு!

சம்மாந்துறையின் அபிவிருத்தி தொடர்பான திட்ட அறிக்கை தயாரித்தல் தொடர்பான செயலமர்வு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் ஏற்பாட்டில் நிந்தவூர், தோம்ப கண்ட ஹோட்டலில் இடம்பெற்றது. சம்மாந்துறைப் பிரதேச சபை தவிசாளர் நௌசாட், பிரதேச செயலாளர் ஹனீபா உள்ளிட்ட கல்வியலாளர்களும் நிர்வாகிகளும் பங்கேற்ற இச்செயலமர்வில், பிரதம வளவாளராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் போராசிரியர் ஜயந்நலால் ரத்னசேகர அவர்களும் கலந்து சிறப்பித்தார். (ன)

Read More