Headlines

தாராபுரம் ஜின்னா விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த கரப்பந்தாட்டப் போட்டியில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்….

மன்னார் தாராபுரம் ஜின்னா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியுதவியில் பகல்/இரவு ஆட்டமாக நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டி…. இந்த போட்டியின் போது 13 அணிகள் பங்கேற்றத்துடன் முதல் மூன்று இடங்களைப்பெற்ற அணிகளுக்கு பெறுமதியான பணப்பரிசில்களும், கிண்ணங்களும் வழங்கி கொளரவிக்கப்பட்டது. இந்த விளையாட்டு நிகழ்வை அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்ததுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்…..

Read More

இன உறவை வலுப்படுத்த அம்பாறையில் இடம்பெற்ற பிராந்திய மாநாடு: அமைச்சர்கள், சர்வமதப் பெரியார்கள் பங்கேற்பு!

இலங்கையில் நிலைபேறான தன்மைக்காக தேசிய மற்றும் மத நல்லிணக்க பிராந்திய மாநாடு, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், பௌத்த இஸ்லாமிய இந்து மத பெரியார்களின் பங்குபற்றுதலுடன், அம்பாறை மொண்டி ஹோட்டலில் இன்று காலை (01) நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் விஷேடமாகப் பங்கேற்று, இன நல்லிணக்கம் தொடர்பான தமது கருத்துக்களையும், முன்மொழிவுகளையும், ஆலோசனைகளையும் வெளிப்படுத்தினர். குறிப்பாக, இந்த மாநாட்டில் தமிழ், முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றமை விஷேட அம்சமாகும். அமைச்சர்காளன ரிஷாட் பதியுதீன், டி.எம்.சுவாமிநாதன்,…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”

40 ஆவது வேலைத்திட்டம்  சேருவில, செல்வநகர், புளியங்குளம் புனரமைப்பு வேலைத்திட்டம் ௦2 மில்லியன் ரூபா நிதியில் ஆரம்பம்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், சேருவில பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.அன்வரின் வேண்டுகோளுக்கிணங்க, சேருவில, செல்வநகர், புளியங்குளம் புனரமைப்பு பணிகள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது….

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் உள்ளக பாதை அபிவிருத்தி!

நாடளாவிய ரீதியில் அதிகம் பேசப்படும் பாடசாலைகளுள் ஒன்றான குருநாகல், கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,  பாடசாலையின் உற்பகுதியை அழகுபடுத்தும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் உள்ளக பாதைகள் அமைக்கும் வேலைகள் நிறைவுபெற்ற நிலையில் உள்ளன. பாடசாலையின் உள்ளக பாதை பணிகளை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம். நஸீர், நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இதன்போது, குளியாப்பிடிய பிரதேச சபை…

Read More