அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்தும், தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு இரண்டாவது நாளாக மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் இன்று (23) இடம்பெற்றது. மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான்…
