புத்தளத்தில் வாழும் வடக்கு மக்களின் பிரச்சினைகள் நேரில் கேட்டறிவு
மன்னார் பிரதேச சபைத் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் வட மாகாண முஸ்லிம்களின் அகதி முகாம்களான கரம்பை, கல்ப்பிட்டி, கண்டக்குழி, பள்ளிவாசல்துறை, கண்டக்குடா, நுரைச்சோலை, ஆலங்குடா, மற்றும் கொய்யாவாடி முகாம்களுக்கு நேற்று (16) விஜயம் செய்தார். தவிசாளர் குழு அங்குள்ள முகாம் அதிகாரிகள், பள்ளிவாசல் தலைவர்கள், கிராம முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் மீள்குடியேற்றம், அடிப்படைத்தேவைகள் மற்றும் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர். தவிசாளர் இது தொடர்பாக கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களது மேலான…
