Headlines

எருக்கலம்பிட்டி வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு வீடமைப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட  வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (05) எருக்கலம்பிட்டியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், பிரதித் தவிசாளர் இஸ்ஸதீன், பிரதேச சபை உறுப்பினர் மஹீசா உட்பட மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர். (ஐ)

Read More

பாலமுனை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

அட்டாளைச்சேனை, பாலமுனை அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (05) இரவு பாலமுனை விளையாட்டு மைதானமருகில் இடம்பெற்றது. நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்சில் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, பாலமுனை பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும்,   ஊரில் உள்ள ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்து தேர்தலின் பின்னரான அரசியல் நடவடிக்கைகள்  தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது. (ன)

Read More

வவுனியா முகத்தான்குளத்தில் ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!

கடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கமைய செட்டிகுளம் பிரதேச சபையின் பிரதித்தவிசாளர் சிவாஜினியின் (அ.இ.ம.கா) வேண்டுகோளின் படி, இந்தக் கிராமத்தின் முக்கிய தேவையாக ஊர் மக்களால் தங்களது ஆலயத்தினை புனரமைப்பு செய்து தருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனினால் ரூபாய் 10 இலட்சம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு முகத்தான்குளம் இந்து ஆலயத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்றபோது, பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்புச்…

Read More

மல்கடுவாவ கிராம சங்கத்துக்கு சமையலறை உபகரணங்கள் வழங்கி வைப்பு!!!

குருநாகல், மல்கடுவாவ பிரதேச  மக்களின் வேண்டுகோளுக்கமைய, மல்கடுவாவ கிராம சங்கத்துக்கு (அன்யோன்ய) தேவையான பீங்கான், கோப்பை ஆகிய சமையலறை உபகரணங்கள், மக்கள் காங்கிரஸின்  குருநாகல் மாநகரசபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீனினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மல்கடுவாவ கிராம சங்கத் தலைவர் அமரசிங்க, மல்கடுவாவ அமைப்பாளர் துஷாரி தமயந்தி உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர். (ன)

Read More

கல்கமுவ அல் /அஸ்ஹர் பள்ளிவாசலுக்கு கதிரைகள் வழங்கிவைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், கல்கமுவ மஸ்ஜிதுல் அஸ்ஹர் ஜூம்ஆ பள்ளிக்கு பிளாஸ்டிக் கதிரைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் (04) முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான எம்.என்.நஸீரின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், குளியாப்பிட்டிய பிரதேச சபை பிரதித்தவிசாளர் எம்.சி.இர்பான், பிரதேசசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஸபீர், கல்கமுவ தொகுதி அமைப்பாளர் பத்ர் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், கல்கமுவ பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும்…

Read More

காங்கேசன்துறையில் கைத்தொழில் பேட்டை!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த பகுதியில் சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கைத்தொழில் வலயமாக மேம்படுத்துவதற்கு சுமார் 998 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது. இதன்கீழ் தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளைக் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கு, கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More

தனது பதவியை கிறிஸ்தவ சமூகத்துக்கு வழங்கிய சனூஸ்: வாய்மை தவறாத, மக்கள் பிரதிநிதி

அரசியலை சாக்கடை என்று பலரும் விமர்சிப்பார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் அந்த சாக்கடையை சுத்தம் செய்வதற்கு அதனை விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோர் முன்வருவதில்லை. இருந்த போதும், இவ்வாறு விமர்சிக்கப்படும் அரசியலுக்குள் வாய்மை தவறாத நல்ல மனிதர்களும் இல்லாமல் இல்லை. அண்மையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து 30க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் வட மாகாணத்துக்கு பயணமொன்றினை மேற்கொண்ட போது, மன்னார் – மாந்தை மேற்கு பிரதேசத்தில் நேர்மை மிக்க ஓர் இளம் அரசியல்வாதியைச் சந்திக்கக் கிடைத்தது. அவர் பெயர் ஏ.எச். சனூஸ். இம்முறை…

Read More

வன்னியில் மீள்குடியேறிய மக்களுக்கு நிரந்தர வீடுகளே அமைச்சர் ரிஷாட்டின் இலக்கு!

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள வன்னி பிரதேசத்தில் எந்தவொரு ஓலை வீடும் இருக்கக் கூடாது என்ற உயரிய இலக்கை நோக்கியே அமைச்சர் றிஷாட் பதியுதீன் பயணிக்கின்றார் என வடமாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரிப் தெரிவித்தார். கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வன்னி மாவட்டத்திலுள்ள வவுனியா, மன்னார், தலைமன்னார் பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை கண்டறியும் பொருட்டு அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அழைப்பை ஏற்று அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள் மத்தியில்…

Read More