Headlines

 திகழி கிராமத்திற்கான மக்கள் காங்கிரஸின் புதிய நிர்வாகக்குழு தெரிவு!

புத்தளம் மாவட்ட திகழி வட்டாரம், திகழி கிராமத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சி புனரமைப்பு மற்றும் புதிய நிர்வாகக் குழுத்தெரிவுக் கூட்டம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான பைசர், பௌசான் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள்  கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர். (ப)

Read More

ரிஷாட் பதியுதீன் பவுண்டேஷனால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு! இஸ்மாயில் எம்.பி பங்கேற்பு!

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட 36 பாடசாலைகளின் அதிபர்களினால் கடந்த 2018-03-29 ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் A.M.M.நௌசாத்திடம் கோரப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைவாக, அகில இலங்கை மக்கள் காங்கரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ரிஷாட் பதியுதீனின் ஆலோசனையின் பேரில், Rishad Bathiudeen Foundationனால் மாணவர்களுக்கான புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (31) மல்வத்தை கமு/சது/மஜீத்புர வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அதிபர் எம்.எம்.முசம்மில் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல…

Read More

வவுனியா பம்பைமடு குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாணும் அமைச்சர் ரிஷாட்டின் யோசனைக்கு ஒருங்கிணைப்புக்குழு அங்கீகாரம்!

யுத்தகாலத்தில் வெளியேறிய மக்களின் பூர்வீகக் காணிகளை மக்கள் இல்லாத வேளையில் கையகப்படுத்திய வனபரிபாலனத் திணைக்களம், தற்போது அந்த மக்கள் தமது நிலங்களில் மீள்குடியேற முயற்சிக்கும் போது, அதனை விடிவிப்பதில் அசிரத்தைக் காட்டுவது ஏனென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வனபரிபாலனத் திணைக்கள அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பிரதியமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோரின்  தலமையில், பாராளுமன்ற உறுப்பினர்களான…

Read More

முசலி வீட்டுத்திட்டம், கமத்தொழில் காப்புறுதி விவகாரங்களுக்கு இவ்வாரம் இறுதி முடிவு! அமைச்சர் ரிஷாட் முசலியில் அறிவிப்பு!

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசத்துக்கான வீட்டுத்திட்டம், கமத்தொழில் காப்புறுதி நிதி போன்ற விவகாரங்களுக்கு இவ்வாரம் இறுதி முடிவைப் பெற்றுத் தருவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்று காலை (02) முசலிக்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சிலாவத்துறை நகர அபிவிருத்தி தொடர்பாக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) அதிகாரிகளுடன் அல்லிராணிக் கோட்டையில் கலந்துரையாடிய பின்னர், முசலி பிரதேச செயலகத்தில் பொதுமக்களுடனான கூட்டமொன்றை நடாத்தினார். அக்கூட்டத்தில் தற்போது முசலியில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்ற வீட்டுத்திட்டம்…

Read More

உப்புக்குளம் ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்!

மன்னார், உப்புக்குளம் அல்பதாஹ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், இந்த வருடத்திற்கான ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வு, உப்புக்குளம் அல்பதாஹ் மைதானத்தில் நேற்று மாலை (02) இடம்பெற்றபோது, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கன் பதியுதீன், மாகாணசபை உறுப்பினர் அலிகான் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். -ஊடகப்பிரிவு-

Read More