Headlines

சமூக சேவைக்கான அமைப்பை உருவாக்க கைகோர்க்குமாறு புத்தளம் அரசியல்வாதிகள், தனவந்தர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் அழைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கின் சொந்த நிதியோடு மேலும் அவரின் உறவினர்கள், நண்பர்களிடம் நிதி சேர்த்து ஒரு வீட்டினை அமைத்துக்கொடுக்கும் ஏற்பாட்டின் அடிப்படையில், அவ்வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வீட்டின் உரிமையாளரினால் (28) ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கையில், ஏழைகளுக்கான உதவிகளை மேற்கொள்ள ஓர் பொதுவான அமைப்பு ஒன்று அத்தியவசியமாகும். இவ்வாறான அமைப்புக்கள் எமது தொகுதியில் குறைவு. அதிலும் எம் சமூகத்திற்கு…

Read More

இஷாக் ரஹுமான் எம்.பியின் ஏற்பாட்டில் குடி நீர் கிணறு!

அனுராதபுர மாவட்டத்தின் திறப்பனை பிரதேச சபை உபதலைவர் முஜிபுர் ரஹ்மானின் வேண்டுகோளுக்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் ஏற்பாட்டில், பலுகஸ்வெவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஊத்துப்பிட்டிய கிராமத்தில் குடிநீர் கிணறொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது. குறித்த, கிணறானது கடந்த சனிக்கிழமை 2018.08.18 அன்று மக்கள் பாவனைக்காக இஷாக் எம்.பியினால் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. (ன)

Read More

கல்பிட்டி பிரதேச மக்களுக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பௌசானின் வேண்டுகோளுக்கினங்க வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், கல்பிட்டி பிரதேச சுயதொழிலாளர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில், சுயதொழில் உபகரணங்கள் வழங்கும்  நிகழ்வு நேற்று (3) கல்பிட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவர் நவவி, மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி நகர அமைப்பாளர் முஸம்மில் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டதுடன், சுயதொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான…

Read More

கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை அமைச்சரவையின் இறுதி அங்கீகாரத்திற்கு  தயாராக உள்ளது!

இலங்கையின் வரலாற்றில ஒரு தசாப்தத்திற்கு பின்னர், நாடு முழுவதிலும்  எட்டு மில்லியன் உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, இறுதி அங்கீகாரத்திற்காக அமைச்சரவை மட்டத்திற்கு வந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்துள்ள தேசிய கூட்டுறவு கொள்கை, அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன், இலங்கையின் கூட்டுறவு துறை  முன்னோக்கி நகர்வதற்கு குறிப்பாக, வழிகாட்டல்  மற்றும் கையேட்டு…

Read More