Headlines

மக்கள் காங்கிரஸின் உடப்பு வட்டார நிர்வாகக் குழுக் கூட்டம்!

நான்கு கிராமங்களை உள்ளடக்கிய உடப்பு வட்டாரத்துக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சி புனரமைப்பு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்று (29) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது, பெரும்பான்மையான தழிழ் மக்கள் தமது ஆதரவைத் தெரிவித்து வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -ஊடகப்பிரிவு-

Read More

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சி – மொனராகலையில் ஆரம்பம்!

தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில், ‘மூச்செடுத்த மூன்று ஆண்டுகள் – ஆயிரம் அறுவடை’ என்ற தொனிப்பொருளில் நடாத்தப்படும் ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மொனராகலையில் நேற்று (29) ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அங்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான பல்வேறு அரச நிறுவனங்களின் கண்காட்சிக் கூடங்களுக்கும் அமைச்சர் விஜயம்…

Read More

உப்பு நிறுவனம் குத்தகையில் வைத்திருந்த 1050 ஏக்கர் காணியை விடுவிக்கத் தீர்மானம்!

பிரபல உப்புத் தொழிற்சாலை நிறுவனத்துக்கு, திருகோணமலையில் நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த 1050 ஏக்கர் நீர்ப் பிரதேசத்தை விடுவிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். திருகோணமலை, நிவாவெளி, இறக்க கண்டி, கும்புறுபிட்டி, குச்சவெளி சிறுமீன்பிடி கைத்தொழிலாளர்களின் தொழிலைத் தடையின்றி மேற்கொள்ளும் பொருட்டே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இதனால், அன்றாட ஜீவனாம்சங்களில் ஈடுபடும் சிறுமீனவர்கள், தங்களது தொழிலை முன்னெடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்…

Read More