பிரதியமைச்சர் அமீர் அலியின் வாழ்த்துச் செய்தி!
ஹஜ் கிரியைகளும் அதனைத் தொடர்ந்து வரும் பெருநாளும் அர்ப்பணிப்யையும் சமூக ஒற்றுமையையும் நமக்கு உணர்த்தி நிற்கின்றன என்று கடற்றொழில் நீரியல் வளம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, இஸ்லாம் ஒற்றுமையையே என்றும் வலியுறுத்தி நிற்கிறது. இந்த அடிப்படையை நமது வணக்க வழிபாடுகள் குறித்து ஆழச் சிந்திப்போமானால் நன்கு புரிந்து கொள்ள முடியும். எந்த ஒரு மனிதனாலும் உலகத்தில் தனியே…
