Headlines

பிரதியமைச்சர் அமீர் அலியின் வாழ்த்துச் செய்தி!

ஹஜ் கிரியைகளும் அதனைத் தொடர்ந்து வரும் பெருநாளும் அர்ப்பணிப்யையும் சமூக ஒற்றுமையையும் நமக்கு உணர்த்தி நிற்கின்றன என்று கடற்றொழில் நீரியல் வளம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, இஸ்லாம் ஒற்றுமையையே என்றும் வலியுறுத்தி நிற்கிறது. இந்த அடிப்படையை நமது வணக்க வழிபாடுகள் குறித்து ஆழச் சிந்திப்போமானால் நன்கு புரிந்து கொள்ள முடியும். எந்த ஒரு மனிதனாலும் உலகத்தில் தனியே…

Read More

சமாதானம் நிலைத்து நிற்க பிரார்த்திப்போம்!

இனங்களுக்கிடையே சுமூகமான நல்லுறவு ஏற்பட்டு, சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழும் சூழல் நிலைத்து நிற்க வேண்டுமென, இந்தத் தியாக திருநாளில் முஸ்லிம்கள் ஏக இறைவனை பிரார்த்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உலகின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்கள் தியாகத்திருநாளை, தியாக உணர்வோடு கொண்டாடி வருகின்றனர். இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து புனித மக்கமா நகரில் நமது…

Read More

மக்கள் காங்கிரஸின் அக்குரனை குருகொட கிளை அங்குரார்ப்பணம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்குரனை, குருகொட கிளை நேற்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குருகொட வட்டார வேட்பாளரும், பிரபல சமூக சேவையாளருமான நலீஸ் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஹம்ஜாட் , கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன், அக்குரனை மத்திய குழுத் தலைவர் இல்யாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள் உட்பட மக்கள் காங்கிரஸின்  முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். (ன)  

Read More

சம்மாந்துறையில் லங்கா சதொச கிளை திறப்பு விழா!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், சம்மாந்துறை, செந்நெல் கிராமத்தின் பௌஸ் மாவத்தை வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள லங்கா சதொச கிளை  நேற்று (20) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உபவேந்தருமான எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு லங்கா சதொச கிளையினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில்,பிரதேச சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், லங்கா சதொச முகாமையாளர்கள், மக்கள்…

Read More

மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிரினால் கீலியன் குடியிருப்பு கிராமத்தின் உள்ளக வீதிக்கான நிதியொதுக்கீடு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவர்களினால், நடப்பாண்டுக்கான நிதியிலிருந்து மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசமான கீலியன் குடியிருப்பு கிராமத்தின், உள்ளக வீதிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, 750 மீற்றர் தூரத்திற்கு தார் வீதி போடுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிவுறும் நிலையில், தவிசாளர் முஜாஹிர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் நிஹால் ஆகியோர் பாதையை பார்வையிட்டனர். (ன)  

Read More

விருதோடை, புழுதிவயல் பிராந்தியங்களுக்கான மாவட்ட மத்திய குழுவிற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விருதோடை வட்டாரத்திற்கான ரெட்பானா, விருதோடை பிராந்தியம்  மற்றும் புழுதிவயல்  பிராந்தியங்களுக்கான மாவட்ட மத்திய குழுவிற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் சனிக்கிழமை  (18 ),  விருதோடை வட்டார அமைப்பாளர் ஆஷிக்கின் ஏற்பாட்டில், மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டங்களில் மக்கள் காங்கிரஸின் புத்தள மாவட்ட பிரதான அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டதுடன், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், ஊர்ப்பிரமுகர்கள்,…

Read More

நிந்தவூரின் கடற்கரையை அண்டிய பிரதேங்களில் புனரமைப்புப் பணிகள்!

நிந்தவூரின் கடற்கரையை அண்டிய பிரதேங்களில் அவசரகால அடிப்படையில் சிரமதானம் மற்றும் புனரமைப்புப்பணிகள் இன்று (21) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிரின் தலைமையில் இடம்பெற்றது நாளாந்தம் தங்களின் பொழுதுபோக்கை கழிப்பதற்காக வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் பெருந்திரளாக நிந்தவூர் கடற்கரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இது புனித ஹஜ் பெருநாள் காலம் என்பதால் பொழுதுபோக்கிற்காக வருகைதரும் மக்களின் தொகை அதிகரித்து காணப்படுகிறது. இதன்போது ஏற்படும் வாகன நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்கும்…

Read More

பாலமுனையில் லங்கா சதொச கிளை திறந்து வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், 403 வது லங்கா சதொச கிளை அட்டாளைச்சேனை, பாலமுனை பிரதான வீதியில் நேற்று (20) திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் ஹுஸைர்(SDO) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தருமான எஸ்.எம்.எம்.இஸ்மாயில் மற்றும் நுகர்வோர் அதிகார…

Read More

குளியாப்பிடிய பிரதேசசபைக்குட்பட்ட அனைத்து குளங்களுக்கும் மக்கள் காங்கிரஸ் மூலம் நன்னீர் மீன் வளர்ப்பு!

குளியாப்பிடிய பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து குளங்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் கடற்றொழில், நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான  அமீர் அலி அவர்களின் நிதியொதுக்கீட்டில், நன்னீர் மீன் வளர்ப்பு வேலைத்திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு, மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் சதொச பிரதித் தலைவருமான என்.எம்.நஸீரின் வேண்டுகோளுக்கினங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய பிரதித் தவிசாளர் எம்.சி. இர்பான் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சபீர் ஆகியோரின் மேற்பார்வையில்…

Read More