“முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் தடைக்கான காரணம் என்ன?” ஹிஜ்றாபுரத்தில் அமைச்சர் ரிஷாட்!
பேரினக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் சிலர், தமது கட்சித் தலைவர்களின் பெயரைப் பயன்படுத்தி, அதிகாரிகளை அச்சுறுத்தி தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியல் இருப்பு மற்றும் எதிர்காலத் தேர்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டே, அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவற்றில் மக்கள் நலன் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட மாகாணசபை உறுப்பினர் ஜனோபரின் நிதியொதுக்கீட்டில் வாழ்வாதாரத்…
