Headlines

அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் நேகம பாடசாலை மைதானத்தில் பார்வையாளர் அரங்கம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், அனுராதபுரம், நேகம முஸ்லிம் மஹா வித்தியாலய மைதானத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மாலை (11) இடம்பெற்றது. பாடசாலை அதிபர் ராஜ் ஐனுல் ஹக் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட இணைப்பாளர் தாரிக், கல்னேவ பிரதேச…

Read More

“அனுராதபுர வாழ் சிறுபான்மையினருக்கு அரசியல் முகவரியை பெற்றுத் தந்தவர் அமைச்சர் ரிஷாட்” இஷாக் ரஹ்மான் எம்.பி!

அனுராதபுர மாவட்டத்தில் வாழும் சிறுபான்மையினரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எட்டாக்கனியாக இருந்த நிலையை மாற்றி, அந்த மாவட்டத்துக்கு அரசியல் முகவரியை பெற்றுத்தந்தவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார். அனுராதாபுர மாவட்டத்தில் நாச்சியாதீவு, கலாவெவ மற்றும் நேகம ஆகிய இடங்களில், இஷாக் ரஹ்மான் எம்.பியின் வேண்டுகோளின் பேரில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (11) பல்வேறு அபிவிருத்தித்…

Read More

கலாவெவ பிரதேச சுயதொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் உதவியுடன், சுயதொழில் முயற்சியாளர்களுக்கான மாபெரும் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு, அனுராதபுரம், கலாவெவ பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனால் இன்று (11) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பௌத்த மதகுருமார், இஷாக் ரஹுமான் எம்.பி, மக்கள் காங்கிரஸின் மாவட்ட இணைப்பாளர் தாரிக், இப்பலோகம பிரதேச சபையின் உறுப்பினர் நளீம் உட்பட அரசியல் பிரமுகர்கள பலரும் கலந்துகொண்டனர். (ன)

Read More

வவுனியா மாவட்ட யுவதிகளுக்கான கருத்தரங்கு!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் கூட்டுறவு திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த, வவுனியா மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்கள் இன்றி காணப்படும் யுவதிகளுக்கான கருத்தரங்கு வவுனியா, வெங்கடேஷ்வரா மண்டபத்தில் நேற்று (10) நடைபெற்றது. கூட்டுறவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நசீரின் வழிகாட்டலில், அமைச்சரின் வவுனியா மாவட்ட பெண்கள் பிரிவு இணைப்பாளர் ஜிப்ரியா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், கூட்டுறவுத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சரத் ஆனந்த, நகரசபை…

Read More

“சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க மக்கள் காங்கிரஸ் அக்கறை” நாச்சியாதீவில் அமைச்சர் ரிஷாட்!

பெரும்பான்மைச் சமூகம் அதிகமாக வசிக்கும் இடங்களில் சிதறி வாழுகின்ற நமது சமூகத்தினர் கட்சி, நிறம் மற்றும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமைப்படுவதன் மூலமே தமது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க முடியுமெனவும், கடந்த பொதுத்தேர்தலில் அனுராதபுர மாவட்டத்தில் நமக்குக் கிடைத்த வெற்றி இதனை நன்கு உணர்த்தியது என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அனுராதபுரம், நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் மைதானத்தில், புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம…

Read More

திருமலை மாவட்ட மத்திய குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் பிரதேச சபை மற்றும் கிண்ணியா நகர சபை வட்டார மத்திய குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல், மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூபின் தலைமையில் மூதூர் சாரா மண்டபம் மற்றும் கிண்ணியா நூலக மண்டபத்தில் இன்று (11) இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் சபை உறுப்பினர்கள், வட்டார இணைப்பாளர்கள் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் திருமலை…

Read More