Headlines

சட்டவிரோத மணல் அகழ்வு விநியோகத்தை நேரில் சென்று பார்வையிட்ட தவிசாளர் செல்லத்தம்பு!

சட்டவிரோதமாக நடைபெறும் மணல் அகழ்வு மற்றும் விநியோகத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் செல்லத்தம்பு இன்று நேரில் சென்று பார்வையிட்டார். முறைகேடாகப் பயணம் செய்த மணல் டிப்பரை கைது செய்த தவிசாளர், சட்ட நடவடிக்கைக்காக இலுப்பைக்கடவை பொலிஸில் ஒப்படைத்தார். எமது பிரதேச வளங்களை எவரும் அழிக்க அனுமதிக்க முடியாது என தவிசாளர் மேலும் தெரிவித்தார். இந்நடவடிக்கையில் இலுப்பைக்கடவை வட்டார உறுப்பினர் மு.விஜயபாண்டி அவர்களும் இணைந்துகொண்டார். (ன)

Read More

இஷாக் எம்.பியின் நிதியொதுக்கீட்டில் கல்கிரியாகம பகுதியில் பாதை புனர் நிர்மாணம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பலாகல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்கிரியாகம கிராமத்தில் 875M நீளமான பாதை புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. புதிய கல்கிரியாகம சந்தியிலிருந்து மத்திய மகா வித்தியாலயம் வரையிலான இப்பாதை கொங்கிரீட் கல் பதித்து புனர் நிர்மாணம் செய்யப்பட்டு 2018.08.04 அன்று மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.   குறித்த நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு…

Read More

“இலங்கை முஸ்லிம்களின் ஆய்வு” நூலின் பிரதி, பிரதமரிடம் கையளிப்பு!

மறைந்த கல்விமான் எம்.எம்.எம். மஹ்ரூப் அவர்களினால் எழுதப்பட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர்,  பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்களினால் தொகுக்கப்பட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட  “Exploring Srilankan Muslims ” இலங்கை முஸ்லிம்களின் ஆய்வு என்ற நூலின் பிரதி, நேற்று (09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஏற்பாட்டில், பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில், பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்களினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை அரச…

Read More

“100 மில்லியன் ரூபா நிதியில் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை விஸ்தரிக்க நடவடிக்கை” அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

வடமாகாண கைத்தொழில் மயமாக்கத்தின் அடுத்த கட்டமாக அச்சுவேலியில் தற்போது இயங்கி வரும் கைத்தொழில் பேட்டையை 100 மில்லியன் ரூபா செலவில் விஸ்தரிப்பதற்கு, தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை (10) இடம்பெற்ற பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் பொருட்களுக்கான சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது, இந்தியாவின் ஸ்மார்ட்…

Read More