Headlines

“வருடாந்த ஜீஎஸ்பி (GSP) பிளஸ் ஏற்றுமதி வருவாயை விட, இலங்கையர்களின் புகையிலை பாவனை 37 சதவீதம் உயர்வானது” புகையிலை செய்கைத் தடை தொடர்பான மாற்றுக் கண்ணோட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் வருடாந்த ஜீஎஸ்பி பிளஸ் ஏற்றுமதி வருவாய் சுமார் 480 மில்லியன் அமெரிக்க டொலராக மட்டுமே இருக்கும் நிலையில், இலங்கையர்களின் வருடாந்த புகையிலை பொருட்களின் பாவனை வருடத்துக்கு 660 மில்லியன் அமெரிக்க டொலரை விட அதிகமானதாக காணப்படுகின்றது எனவும், பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையே நாம் செலவிட்டு வருகின்றோம் எனவும் புகையிலைப் பாவனையின் யதார்த்த நிலை இதுவே எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புகையிலைச் செய்கைத்…

Read More

மக்கள் காங்கிரஸின் களுத்துறைக் கிளையின் மத்திய குழுக் கூட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் களுத்துறை கிளையின் மத்திய குழுக் கூட்டம், களுத்துறை நகரசபை உறுப்பினரும், அமைப்பாளருமான ஹிஷாம் ஸுஹைல் தலைமையில் (23) நடைபெற்றது. இதன்போது, கட்சியினால் ஒதுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் மற்றும் பொதுவசதிகள், சுயதொழில் என்பவற்றிற்கான நிதி பயன்படுத்தப்பட வேண்டிய செயற்கிரமம் விரிவாக ஆராயப்பட்டு, பொறுப்புக்கள் உறுப்பினர்களுக்கு அமைப்பாளரால் பகிர்ந்தளிக்கப்பட்டன. அத்துடன், பொதுமக்கள் பாவனைக்காக மேலும் 06 குளாய்நீர்க் கிணறுகள் அமைப்பதற்கான் இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டன. இங்கு உரையாற்றிய உறுப்பினர் ஹிஷாம் கூறியதாவது, சாதாரண மக்களுக்கு சாக்கடையாகவும் திட்டுப்பட்டதாகவும்…

Read More

இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவராக ரியாஸ் சாலி நியமனம்!!

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான, இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக, நியமிக்கப்பட்ட ரியாஸ் சாலி நேற்று (25) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால், இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரான ரியாஸ் சாலிக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹுசைன் பைலா, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி, நுகர்வோர் அலுவல்கள்  அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன…

Read More

வெள்ளைப்புறா விளையாட்டுக் கழகத்திற்கு ஒலிபெருக்கி வழங்கி வைப்பு!

விருதோடை (எல்லுச்சேனை) வெள்ளைப்புறா விளையாட்டுக்கழகம் விருதோடை வட்டார இளைஞர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் வருடாந்தம் மென்பந்து சுற்றுப்போட்டியை நடாத்தி வருகின்றது . அதே நோக்கில் இவ்வருடமும் நடாத்திய மென்பந்து சுற்றுப்போட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் விருதோடை வட்டார அமைப்பாளரும், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான ஆஷிக் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு  மென்பந்து சுற்றுப்போட்டியை ஆரம்பித்து வைத்தார். அத்தோடு வெள்ளைப்புறா விளையாட்டுக்கழக உறுப்பினர்களின் வேண்டுககொளுக்கிணங்க ஆஷிக்கின் சொந்த நிதியில் இருந்து சுமார் 100000/= ரூபாய் பெறுமதியான…

Read More

சங்கநாயக்க தேரரைச் சந்தித்து சுகம் விசாரித்த ரிஷாட் பதியுதீன்! -ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

வவுனியா ஸ்ரீபோதி தக்க்ஷினாராமய விகாரையின் விகாராதிபதியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான சங்கநாயக்க தேரருமான, சியம்பலகஸ்வேவ விமலசார தேரர் சுகயீனமுற்றுள்ளார். அவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான கௌரவ ரிஷாட் பதியுதீன் நேரில் சந்தித்து சுகம் விசாரித்துள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வில்பத்துக் காட்டை அழிக்கிறார். அங்கு முஸ்லிம்களைக் குடியேற்ற முயற்சிக்கிறார், வன்னியில் அரபு தேசம் ஒன்றை உருவாக்கவும் அவர் முயற்சிக்கிறார் என்று, உண்மைக்குப் புறம்பான இட்டுக்கட்டுகளைச் சுமத்தி, கொழும்பு…

Read More