Headlines

சேதமடைந்திருக்கும் கெனல் வீதி பாலம் விரைவில் புனரமைப்பு!

கண்டி மாவட்டத்தின் உடுநுவர தேர்தல் தொகுதியில், ரகுபத்த கிராமத்துக்கு செல்லும் கெனல் வீதியில் அமைந்திருக்கும் பாலம் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்து காணப்படுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உடுநுவர பிரதேச சபை உறுப்பினர் நஸார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹனீபா மற்றும் நஜீம் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, உடுநுவர பிரதேச சபையின் தவிசாளர் காமினி தென்னகோன் சேதமடைந்திருக்கும் பாலத்தை அண்மையில் பார்வையிட்டார். அத்துடன் சேதத்துக்குள்ளாகியிருக்கும் பாலத்தை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை வெகு விரைவில் மேற்கொள்வதாகவும்…

Read More

யாழ் மாநகர சபை உறுப்பினர் நிலாம் தலைமையில் இப்தார் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நியாஸ் நிலாம் தலைமையிலான, இப்தார் நிகழ்வு இன்று (10) புதிய சோனகத்தெரு மஸ்ஜிதுல் அபூபக்கர் பள்ளியில் இடம்பெற்றது. மவுண்டன் ஓப் மேசி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் நிகழ்வில், யாழ் மாநகர சபை மேயர் திரு. இமானுவேல் ஆர்னோல்ட், ஏனைய கட்சிகளின் மாநகர சபை உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகிகள், ஊர்மக்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்துசிறப்பித்தனர். (ன)    

Read More

மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் மட்டக்குளிக்கு விஜயம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான பாயிஸ், கொழும்பு 15, மட்டக்குளி சமித்புர ஸ்ரீ விக்கிரமபுர பிரதேச வாழ் மக்களின் குறைபாடுகளை ஆராயும் நோக்கில், நேற்று (10) அங்கு விஜயம் செய்ததுடன், அப்பிரதேச மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தப் பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகள் மற்றும் மக்களின் வாழ்வாதார தேவைகள் குறித்தும்  கேட்டறிந்துகொண்ட மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், விரைவில் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்….

Read More

நிந்தவூர் மாட்டு வண்டில் உரிமையாளர் சங்கத்தினருடனான கலந்துரையாடல்!

நிந்தவூரில் செயற்படும் மாட்டு வண்டில் உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை (08) தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, மாட்டு வண்டில் உரிமையாளர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களது வாழ்வாதார முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -முர்ஷித்-    

Read More