Headlines

‘தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதச் செய்யும் இனவாதிகளின் திட்டத்துக்கு பலிக்கடாவாகாதீர்கள்’ மாந்தையில் அமைச்சர் ரிஷாட் உருக்கமான கோரிக்கை!

  -ஊடகப்பிரிவு- தமிழர்களையும், முஸ்லிம்களையும் முட்டிமோதச் செய்து, பிரச்சினைகளை உருவாக்குவதற்காக இனவாதிகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளுக்கு இரண்டு சமூகமும் சோரம்போய்விடக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச சபையில் சொர்ணபுரி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வடமாகாண மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் மௌலவி அஷ்ரப் முபாரக் (ரஷாதி) தலைமையில், சொர்ணபுரியில் இன்று (26) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்….

Read More

மு.கா ஒலுவில் அமைப்பளர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகாலப் போராளியும், ஒலுவில் அமைப்பாளராகவும் செயற்பட்ட அலியார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஜெமீல் முன்னிலையில் இணைந்துகொண்ட அவர், இந்தத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்காக உழைப்பதாகவும், மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

Read More

‘கல்முனை மாநகரசபை தேர்தல் முடிவுகள் முஸ்லிம் அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ வேட்பாளர் ஏ.எம்.றியாஸ்!

-ஊடகப்பிரிவு-  கல்முனை மாநகர சபைக்கான தேர்தலின் முடிவுகளில் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவை எடுக்கும் பொறுப்பு உங்கள் கைகளில் திணிக்கப்பட்டுள்ளது என்று வேட்பாளர் ஏ.எம்.றியாஸ் பெஸ்டர் தெரிவித்துள்ளார். கல்முனை மாநகர சபைத் தேர்தலில்  12 ஆம் வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எம்.றியாஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தொடர் ஏமாற்றத்தினால் செல்வாக்கு இழந்து போயுள்ள துரோகிகளின் கட்சியால் திட்டமிட்டு விரிக்கப்பட்டுள்ள சதி வலையிலிருந்து தப்பித்துக்கொள்ளவேண்டிய…

Read More

தனிக்கட்சி ஆரம்பித்ததன் நோக்கம் என்ன? வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் விளக்கம்

-ஊடகப்பிரிவு- வடக்கு கிழக்கிலும், வடக்கு கிழக்குக்கு வெளியேயும் அதிக எண்ணிக்கையிலும், அதிக விகிதாசாரத்திலும் முஸ்லிம்கள் வாழும் இடங்களில் சமூக நன்மை கருதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதோடு, நாட்டில் மொத்தமாக 15 மாவட்டங்களில் தேர்தலில் களமிறங்கியிருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கூறினார். வவுனியா நகரசபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களான அப்துல் பாரி, லரீப் ஆகியோரை ஆதரித்து பட்டாணிச்சூரில்…

Read More

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சேகு பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பட்டியடிப்பிட்டியில் இன்று மாலை 07.00 மணிக்கு இடம்பெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் பங்கேற்கவுள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் சேகு இஸ்ஸதீன் இணைந்தவுடன் பங்கேற்கும், முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில் பிரபல அறிவிப்பாளரும், மக்கள் காங்கிரஸின் கல்முனை அமைப்பாளருமான எ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அழிவுகளுக்கு அப்பாலான அபிவிருத்திகளை பெற்றுக் கொள்ள ஒன்றிணையுங்கள் -தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா-

  -ஊடகப்பிரிவு- நானாட்டான் பிரதேச மக்கள் அபிவிருத்தியுடன் இணையும் சக்திகளுடன் பயணிப்பதை விடுத்து எதையும் பெற்றுத்தர முடியாதவர்களுடன்  இருப்பதற்கான காரணம் அவர்களுக்கே புரியாமலுள்ளது எனவும் தற்போது அவர்கள்  அபிவிருத்தியின் ஒளியினை நோக்க ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் கைத்தொழில், வர்த்தக அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா கூறினார். மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச சபைக்கு ஜக்கிய தேசிய முன்னணியில் இலகடிப்பிட்டி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்…..

Read More

‘முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரே கட்சி மக்கள் காங்கிரஸ்தான்’ வேட்பாளர் ஏ.எம். எம். மாஹிர்!

-ஊடகப்பிரிவு- இன்று இந்த நாட்டு முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரேயொரு கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாத்திரம்தான் உள்ளது என காத்தான்குடி நகர சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தாறுஸ்ஸலாம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எம்.எம். மாஹிர் தெரிவித்தார். அவரது பிரசார அலுவலகம் காத்தான்குடி தாறுஸ்ஸலாம் வீதியில் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இன்று அகில இலங்கை…

Read More