“அவதூறுகளினாலும், அபாண்டங்களினாலும் மக்கள் காங்கிரஸின் எழுச்சியை மட்டுப்படுத்திவிட முடியாது” களுத்துறையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் செல்வாக்கை குறைக்க அரசியல் எதிரிகள் எத்தனை சதித் திட்டங்கள் தீட்டினாலும், தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை அவர்களுக்கு புகட்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். களுத்துறை நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, களுத்துறை நகரசபை முதன்மை வேட்பாளர் ஹிஷாம் சுஹைல் தலைமையில், களுத்துறை தெற்கு பள்ளிவீதியில் (12) இடம்பெற்ற தேர்தல்…
