Headlines

“அவதூறுகளினாலும், அபாண்டங்களினாலும் மக்கள் காங்கிரஸின் எழுச்சியை மட்டுப்படுத்திவிட முடியாது” களுத்துறையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் செல்வாக்கை குறைக்க அரசியல் எதிரிகள் எத்தனை சதித் திட்டங்கள் தீட்டினாலும், தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை அவர்களுக்கு புகட்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். களுத்துறை நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, களுத்துறை நகரசபை முதன்மை வேட்பாளர் ஹிஷாம் சுஹைல் தலைமையில், களுத்துறை தெற்கு பள்ளிவீதியில் (12) இடம்பெற்ற தேர்தல்…

Read More

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கின் பொய் குற்றச்சாட்டுக்களும், அதற்கான பதிலும்….

–தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா– வடக்கு முஸ்லிம்களால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் அந்த மக்களின் அனைத்து தேவைகள் தொடர்பில் ஆற்றிவருகின்ற பணிகள்  வரலாற்றில் அழிக்க முடியாததொன்றாகும். யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளின்  பின்னரான துரித அபிவிருத்தி என்பன தொடர்பில் பார்க்கின்ற போது, அது அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சரானதன் பின்னர்தான் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை என்பதை பகிரங்கமாக கூறியாக வேண்டும். வன்னி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக றிசாத் பதியுதீன் தெரிவானது முதல்,…

Read More

பொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் தீக்கிரை!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொல்கஹவெல கட்சிக் காரியாலயத்தை இன்று அதிகாலை (15) 1.30 மணியளவில், இனம்தெரியாதவர்கள் சேதமாக்கியுள்ளதுடன், காரியாலயத்துக்கு முன்னே கட்டப்பட்டிருந்த கட்டவுட்களையும், பதாதைகளையும் தீக்கிரையாக்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரமுகரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.என்.நசீர் தெரிவித்தார். பொல்கஹவெல தேர்தல் தொகுதியின் மக்கள் காங்கிரஸின் பிரதான அமைப்பாளரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான அன்பஸ் அமால்தீனின் உருவப்படத்துடன் கட்டப்பட்டிருந்த உயரமான கட்டவுட்டை மையமாக வைத்தே, இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாகவும், மக்கள்…

Read More

குளியாப்பிட்டிய பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் மஹ்ரூப் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிடிய பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு இன்று (14) விசினவ, மடலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்துகொண்டதுடன், வேட்பாளர்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விளக்கங்களையும் அளித்தார். இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் மற்றும் குளியாப்பிட்டிய பிரதேச சபை வேட்பாளர்கள்…

Read More

கொண்டச்சியில் சுபியான் ஆசிரியரை ஆதரித்து தேர்தல் பிரசாரக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்ட பிரதேச சபை தேர்தலில் கொண்டச்சி, கரடிக்குளி வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் சுபியான் ஆசிரியரை ஆதரித்து,  கொண்டச்சி அமைப்பாளர் லாபீர் மெளலவியின் தலைமையில் இன்று மாலை (14) மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. கொண்டச்சி  கிராமத்தின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால செயற்பாடு சம்பந்தமாகவும், ஏன் அகில இலங்கை மக்கள்  காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும்? என்பது தொடர்பிலும், கட்சியின் செயற்பாடுகள் பற்றியும் தெளிவான உதாரணங்கள் மூலம்…

Read More

“எம்.சி.இர்பானின் வெற்றியை உறுதி செய்வோம்” எம்.என்.நஸீர்!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் கெகுணுகொல்ல வட்டாரத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும்  எம்.சி.இர்பான் ஆசிரியரை ஆதரித்து  முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூரியதாவது, கடந்த காலங்களில்  இவர் அபிவிருத்தி மற்றும் சமூக பணிகளில் கூடிய கவனம் செலுத்தி வருவதுடன், கெகுணுகொல்ல வட்டாரத்தில் மட்டுமன்றி சியம்பலாகஸ்கொடுவ,பொதுஹர போன்ற வட்டாரங்களிலும் சகோதரர் இர்பான் பல சேவைகளை செய்துள்ளார். மேலும், பிரதேசத்தின் பல…

Read More