Headlines

‘அம்பாறை மாவட்டத்தில் 17 வருடங்களாக ஆட்சி செய்து வருகின்ற முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் கொடுத்த ஆணையை நிராகரித்துள்ளனர்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

பதினேழு வருடங்களாக பாராளுமன்றத் தேர்தலிலே, மாகாண சபைத் தேர்தலிலே மாநகர சபைத் தேர்தலிலே வாக்களித்த மக்கள் அந்தந்தக் காலகட்டத்திலே அபிவிருத்தி பற்றி மேடைகளிலேயே கேட்டிருந்தால், இப்போது தேவைப்படுகின்ற அபிவிருத்தியை எங்களிடம் கேட்க வேண்டிய தேவை இருந்திருக்காது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையில் பெரியநீலாவணை 2ஆம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு) கட்சியில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.நெய்னா…

Read More

தாராபுரத்தில் இடம்பெற்ற வேட்பாளர் ஆதரிப்பு கூட்டம்!

-ஊடகப்பிரிவு-  மன்னார், தாராபுரம் வட்டாரத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எச்.உவைஸ் அவர்களை ஆதரித்து, புத்தளம் அல் காஸிமி சிட்டியில் நேற்று (07) கூட்டமொன்று இடம்பெற்றது. இளைஞர்களின் ஏற்பாட்டில்  நடைபெற்ற இந்நிகழ்வில், வேட்பாளரின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதுடன், சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளிபரிபாலன சபை உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் மக்கள் காங்கிரஸின்  ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்    …

Read More

புத்தளம் பிரதேச சபை வேட்பாளர் அலுவலகம் திறப்பு நிகழ்வில் நவவி எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- புத்தளம் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் றிபாஸ் நசீரின் தேர்தல் காரியாலயம் திறப்பு நிகழ்வு நேற்று (06) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.        

Read More

கிண்ணியா பைசல் நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- கிண்ணியா நகரசபைத் தேர்தலில் பைசல் நகர் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்  ஹாரிஸ் அவர்களை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பும், கலந்துரையாடலும் பைசல் நகர் கட்சிக்கிளையில் நேற்று மாலை (06) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.    

Read More