Headlines

‘2020ம் ஆண்டை நோக்கிய புதிய பாதை’ கூட்டுறவுத்துறையின் நவீன வளர்ச்சிக்கு உதவும் குருணாகலில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை

  நூறு வருட பழமைவாய்ந்த இலங்கையின் கூட்டுறவுத் துறையை மறுசீரமைத்து  நவீனத்துவப்படுத்தும் வகையிலான 2020ம் ஆண்டை நோக்கிய புதிய பாதை ஒன்றுக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 95வது சர்வதேச கூட்டுறவுத் தின விழா குருணாகலில் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கூட்டுறவு, அபிவிருத்தி, நோக்கு – 2020 என்பதை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த நவீன மறுசீரமைப்பு, கூட்டுறவுத்துறையை மேலும் பலப்படுத்துவதற்கு உதவும்….

Read More

மக்களின் பிரச்சினைகளை கிராமங்களுக்கு சென்று கேட்டறிந்து உரிய தீர்வுக்கு வழிகோலுங்கள்

அதிகாரிகளும், அலுவலர்களும் வெறுமனே அலுவலகத்தில் பணிபுரிந்தால் மட்டுமே போதுமென்ற மனோ நிலையை மாற்றி, மக்கள் பிரச்சினைகளுடன் நேரடித் தொடர்புபட்ட அரச ஊழியர்கள், அந்த மக்களைச் சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்து உரிய தீர்வை சரியாக வழங்க வேண்டுமென இன்று (03.07.2017)வன்னிமாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது அமைச்சரும், இணைத்தலைவருமான ரிஷாட்ப தியுதீன் அறிவுறுத்தினார். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெலிஓயா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சில அதிகாரிகளின் நடவடிக்கைகளை கடிந்து கொண்டார். கூட்டத்திற்கு சமூகமளிக்காத…

Read More

அதிகாரங்களை எப்படி பறிக்கமுடியுமென்ற சதி முயற்சிகளை கைவிட்டு, சமூகத்திற்காக இணைந்து பணியாற்ற முன்வாருங்கள் அபாண்டங்களை பரப்புவோருக்கு அமைச்சர் ரிஷாட் அழைப்பு

அதிகாரங்களையும் பதவிகளையும் தன்னிடமிருந்து  அகற்றி தன்னை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பலாம் என்ற தீய எண்ணத்தில் தொடர்ச்சியாக சதிவேலைகளில் ஈடுபட்டு வருவோர் தமது நடவடிக்கைகளை கைவிட்டு, இருக்கும் அதிகாரங்களை கொண்டு சமூகத்திற்கு உருப்படியானப் பயனை பெற்றுக்கொடுப்பது  பற்றி சிந்திக்க வேண்டும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரமுது அஹனப் எழுதிய “நவரசம்”; கவிதை நூல் வெளியீட்டு விழா பண்டாரவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது பிரதம  அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  கலந்து கொண்டார். அவர்…

Read More

தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு முன்னுரிமை வழங்கியதற்கு காரணம் என்ன? பெரியமடுவில் அமைச்சர் றிஷாட் விளக்கினார்.

சுஐப் எம் காசிம் போரின் பிடியில் இருந்து தப்பி முள்ளுக்கம்பிகளுக்குள்ளே தஞ்சமடைந்து வாழ்ந்த தமிழ் மக்களைக் குடியேற்றுவதில் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டதனாலேயே மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த இறுதிக்காலப்பகுதியில் வடக்கு முஸ்லிம்களை குடியேற்ற முடியாது போனதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பள்ளமடு-பெரியமடுவுக்கான பாதை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சர் கூறியதாவது, வங்குரோத்து முஸ்லிம் அரசியல் வாதிகளும் அவர்களின் அடிவருடிகளும்…

Read More

பெரியமடு மகிளங்குளம் – பள்ளமடு பாதையை இன்று (01) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 455 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 11.4 கிலோ மீற்றர் நீளமான பெரியமடு மகிளங்குளம் – பள்ளமடு பாதையை இன்று (01) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் மாகாண அமைச்சின் செயலாளர், மாகாண போக்குவரத்து ஆணையாளர், மற்றும் உப்புக்கூட்டுத்தாபனத் தலைவர் அமீன், அமைச்சரின் இணைப்பாளர்களான…

Read More

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையையும் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப் போட வேண்டாம். யாழ் கச்சேரியில் அமைச்சர் ரிஷாட் உருக்கமான வேண்டுகோள்

-சுஐப் எம்.காசிம் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், மீள்குடியேறத் துடிக்கும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டுக்கொண்டிருப்பதை விடுத்து, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு  இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சகல கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் முக்கியஸ்தர்களும் உதவ வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். யாழ் கச்சேரியில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் தொடர்பாக இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் அமைச்சர்…

Read More

ரிஷாட்டின் கோரிக்கையை ஏற்று புத்தளம், வன்னி வைத்தியசாலைகளை மேம்படுத்த ராஜித பல மில்லியன் ரூபா ஒதுக்கீடு

ஊடகப்பிரிவு   புத்தளம், கற்பிட்டி மன்னார், சிலாபத்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள மாவட்ட, ஆதார வைத்தியசாலைகளின் புனரமைப்புக்கென பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டையும், மருத்துவ உபகரணத் தேவைகளுக்காக நிதி உதவியையும் அமைச்சர் ராஜித சேனாரட்ன வழங்கியுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பெயரில் அமைச்சர் ராஜித இந்த உதவிகளை வழங்கியுள்ளார். புத்தளம் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு 101மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் உடனடியாக 30மில்லியன் ரூபா கையளிக்கப்பட்டு ஆறு…

Read More

அடுத்த சர்வதேச கூட்டுறவு தினவிழாவை வடக்கில் கொண்டாட முடிவு கூட்டுறவுக் கொள்கை வரைபு தயார் என அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

  சுஐப் எம். காசிம் சர்வதேச கூட்டுறவு தினத்தை வடமாகாணத்தில் அடுத்த வருடம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் முதலாம் திகதி குருணாகலையில் இடம்பெறவுள்ள 95வது சர்வதேச கூட்டுறவுத் தின நிகழ்வில் ஜனாதிபதியிடம் இந்த புதிய கூட்டுறவுக் கொள்கை அடங்கிய வரைபு ஒன்று கையளிக்கப்படுவதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குருணாகலையில் இடம்பெறவுள்ள கூட்டுறவுத் தின விழாவையொட்டி அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் கலந்து கொண்டு உரையாற்றிய போதே…

Read More

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகள் தரமுயர்வு, அபிவிருத்திகள் தொடர்பான உயர்மட்ட சந்திப்பு

சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன அவர்களை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட அபிவிருதிகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் பாராளுமன்ற உறுப்பினர் நவவி , தென்கிழக்கு பல்கலைகழக முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் குழுவினர் திருகோணமலை ,மன்னார், புத்தளம் ,அம்பாறை மாவட்டங்களில் வைத்தியசாலைகள் அபிவிருத்திகள் தொடர்பான உயர்மட்ட சாதிப்பு நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் அமைச்சின் செயலார், Mr. Janaka Sugathadasa சுகாதார அமைச்சின் அபிவிருத்தி திட்டங்களுக்கான மேலதிக செயலாளர் சந்திர…

Read More

அமைச்சர் ராஜித அமைச்சர் ரிஷாட் பங்கேற்ற கூட்டத்தில் முக்கிய முடிவுகள்

ஊடகப்பிரிவு வடக்கு, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ள  பிரதான  வைத்தியசாலைகளின் குறைபாடுகளையும், ஆளணித் தேவைகளையும்; நிவர்த்தி செய்து தருவதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்துள்ளதுடன் மருத்துவ துறையில் எதிர்கொள்ளும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உடன் நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்தார். கொழும்பில் சுகாதார அமைச்சின் தலைமையகமான சுவசிரிபாயவில் நடைபெற்ற உயர்மட்ட…

Read More

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணம் இரத்தினபுரியில் அமைச்சர் றிஷாட்!

 (ஊடகப்பிரிவு)  இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய வியாபாரிகளுக்கு இரண்டு அல்லது மூன்று லட்சம் ரூபாய் வரை நிவாரண உதவியும் அதற்கு மேலதிகமான பாதிப்புகளுக்குள்ளான வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வசதிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இரத்தினபுரி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை (27.06.2017) இடம்பெற்ற அனர்த்த நிவாரண மதிப்பீடு தொடர்பான உயர்மட்ட  கலந்துரையாடலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த தகவலை வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது,…

Read More

புத்தளம் – கொத்தாந்தீவில் அடாவடி – பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்

  பெருநாள் நிகழ்ச்சிகளுக்காக இரு தினங்களுக்கு முன்னர் ஊரவர்கள் முறைப்படி போலீஸ் அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த வேளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் ரேஸ் நடத்தவிருந்த சுமார் 11 அரை ஏக்கர் அறுதிச் சீட்டுடன் கூடிய காணியில் நின்று கொண்டு அது தமக்குரிய இடம் என்றும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அனுமதி தர முடியாதென்றும் கூறியபோது இரு தரப்பினருக்கும் இடையில் பலத்த முறுகல் நிலை தோன்றியுள்ளது. சர்ச்சை தொடர்ந்தபோது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் எம்மவரின் தலையில்…

Read More