‘முஸ்லிம் நாடுகள் தட்டிக்கேட்குமென நினைப்பது மடைமைத்தனம்’ ‘றோகிங்யோ நல்ல படிப்பினையென அமைச்சர் ரிஷாட் திஹாரியில் தெரிவிப்பு’
இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களும், பிரச்சினைகளும் ஏற்படும் போது, அரபுவுலக நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவுமென்று நாம் நம்பிக்கை கொண்டிருப்பது மடைமைத்தனமானதெனவும், றோகிங்யோ முஸ்லிம்களின் அவலங்கள் நமக்கு நல்ல படிப்பினையாக அமைந்துள்ளதெனவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திஹாரிய ஈமானிய அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று காலை (15.10.2017) திஹாரியில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர், பட்டம் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் நினைவுச்சின்னங்களையும் வழங்கினார்….
