Headlines

அம்பன்பொல லங்கா சதொச திறப்பு விழா!

-ஊடகப்பிரிவு-  குருநாகல் அம்பன்பொல பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லங்கா சதொச கிளை இன்று (24) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க,  முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் மற்றும் சதொச நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.        

Read More

மூதூர் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்,  மூதூர் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று,  மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் தலைமையில் (24)  இடம்பெற்றது. இதன்போது தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் முன்னெடுப்புக்கள் குறித்தும்  கலந்தாலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.          

Read More

குளியாப்பிட்டிய பிரதேச சபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் குளியாப்பிட்டிய பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலொன்று நேற்று மாலை (23) ரஸீன் ஹாஜியாரின் இல்லத்தில்  இடம்பெற்றது. இதன்போது, கெகுணுகொல்ல பிரதேசத்தின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் ரஸ்லான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார். இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற வேட்பாளருமான டாக்டர்.ஷாபி சிஹாப்தீன், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் எஸ்.எல்.நஸீர், முன்னாள் மாகாண சபை…

Read More

புறத்தோட்ட வட்டாரத்தின் வேட்பாளரை ஆதரித்த கூட்டம்!

-முர்ஷிட் முஹம்மட்- அம்பாறை மாவட்ட, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான புறத்தோட்டம் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.பி.தீனுல்லாவை ஆதரித்து நேற்றிரவு (22) அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், பாலமுனை வட்டாரத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.முனாப், முன்னாள் நீதிபதி சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல்.ஏ.கபூர்,…

Read More

தேசிய மீலாத் விழா நிகழ்வு 2017!

-ஊடகப்பிரிவு- 2017ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இன்று (23) யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், கல்விமான்கள் என…

Read More