Headlines

மண்டாடுகம பாடசாலை மைதானம் புனரமைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில், அநுராதபுரம், மண்டாடுகம முஸ்லிம் வித்தியாலய மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவு  செய்யப்பட்டது. ஒரு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இந்த மைதானம், இஷாக் ரஹ்மான் எம்.பியினால் மாணவர்களின் பாவனைக்காக   கையளிக்கப்பட்டது.      

Read More

“திருகோணமலையில் 40 வருட பழைமையான குழாய்நீர் இணைப்புக்களே இன்னும் காணப்படுகின்றன” அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!

பிராந்திய அபிவிருத்தி, நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள், மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதத்தின் போது (30/ 11/ 2017)  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் உரயாற்றினார். அவர் கூறியதாவது, திருகோணமலை மாவட்டம் மற்றும் கிண்ணியா பிரதேச சபை, திருகோணமலை நகர அபிவிருத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் 40 வருட பழைமையான குழாய்நீர் இணைப்புக்களே இருக்கின்றன. இவற்றினால் திருட்டுத்தனமான இணைப்புக்கள் அதிகரித்துள்ளன. இதனை நவீனமயப்படுத்துவதுடன், 455 கிலோமீற்றர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்…

Read More

தேர்தல் முன்னெடுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாகடர்.ஹில்மி மஹ்ரூபின் தலைமையில் கிண்ணியா, குட்டியாகுள பிரதேசத்தில் மக்கள் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று (01) இடம்பெற்ற இந்த சந்திப்பில், வடக்கு, கிழக்கு இணைப்பு சம்பந்தமான  விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் எதிர்வரும் தேர்தலை எவ்வாறு முகம்கொடுப்பது போன்ற பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்போது இப்பிரதேச வாழ் மக்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டு, தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர்.  

Read More

‘வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மாகாண சபை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்’ வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு அழுத்தம்…

வடமாகாண சபையின் வாக்காளர்களாக காணப்படும் சுமார் 50,000   முஸ்லிம்களுக்கான, மாகாண சபை பிரதிநிதித்துவத்தை சாத்தியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாகாண சபை எல்லை நிர்ணயத்திற்கான  ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென, வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் மாந்தை மேற்கு – மடு கிளை வலியுறுத்தியுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் செயலாளரிடம், வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கையளித்துள்ள முன்மொழிவில் இவ்வாறு சுட்டிக்காட்டப்படுள்ளது. முஸ்லிம் பிரதேச எல்லை நிர்ணயம் சம்பந்தமான இந்த முன்மொழிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கை நாட்டில் சிங்கள மக்களுக்கு…

Read More

மன்னார் உப்புக்குளத்தில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க  மன்னார், உப்புக்குளம் கிராமத்திற்கான வீதி விளக்குகள் பொருத்தும் பணி இன்று இடம்பெற்றது. முன்னாள் நகர சபை உறுப்பினர் நஹுசீனின் மேற்பார்வையின் கீழ் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.            

Read More