வாக்குகளுக்காக வாக்குறுதியளித்தவர்கள், இரண்டு ஊர்களையும் பிரித்தாண்டதன் விளைவே இன்றைய நிலை, கட்டார் வாழ் இலங்கையருடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு
சாய்ந்தமருது பிரதேச சபையை பெற்றுத்தருவதாக பிரதமரை கல்முனைக்கு அழைத்து வந்து வாக்குறுதி அளித்தவர்கள், இரண்டு தரப்பினரையும் ஒன்றாக இருத்தி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறியாமல் தனித்தனியாக சந்தித்து பேசியமையினாலேதான் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை பிரச்சினை தற்போது இழுபறி நிலைக்கு உள்ளாகி, விஷ்வரூபம் எடுத்திருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். டோஹா நகரில் உள்ள கொர்னிச் அல்பனார் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில், கட்டார் வாழ் இலங்கையர்களை சந்தித்துக் கலந்துரையாடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறை…
