Headlines

பாராளுமன்ற உறுப்பினர் நவவி எம்.பி யின் தலைமையில் புத்தளம் அக்கரைப்பற்று பகுதியில் இரண்டு பாதைகள் அங்குரார்ப்பணம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான M.H.M.நவவி அவர்களால் அக்கரைப்பற்று பகுதிக்குள் இரண்டு பாதைகள் அங்குரார்ப்பணம் செய்யும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது . பாராளுமன்ற உறுப்பினரின் விசேட நிதியூடாக பரிசாதி தோட்டத்திலிருந்து பாலச்சோலையை இணைக்கும் வீதிக்கான செயல் திட்டத்திற்கு 1 கோடி 34 இலட்சத்திற்கு ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதே போன்று பாராளுமன்ற உறுப்பினருக்கு பிரதமர் ஊடாக கிடைத்த இரண்டு கோடி விசேட நிதியில் ரெட்பானா பாதைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 15 இலட்சத்திற்கான…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி உதவியில் மன்னார் உப்புக்குளம் பள்ளிவாசால் கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின்  நிதி உதவியில் (15 லட்சம் ரூபா) மன்னார் உப்புக்குளம் பெரியபள்ளியின் கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து யைக்கப்பட்டது… இந்த நிகழ்வில் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் மற்றும் முன்னாள் மன்னார் நகரசபை உறுப்பினர் நகுசீன் மன்னார்  மாவட்ட மீள் குடியேற்ற செயலணியின் இணைப்பாளர் முஜீப் மற்றும் உப்புக்குள பள்ளித்தலைவர் ஊர் பிரமுகர்களும்  கலந்துகொண்டனர்.

Read More

அரிசியின் விலை  மேலும்  குறைகின்றது. சதொச அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசியின் அசாதாரண விலையேற்றம் காரணமாக மக்களுக்கு சாதாரண விலையில் அரிசியை நாடெங்கும் சில்லறையாகவும் மொத்தமாகவும் விநியோகிக்க சதொச நிறுவனம் முடிவு செய்துள்ளது. நாடு பூராகவுமுள்ள 370 சதொச நிறுவனத்தினூடாக சாதாரண விலையில் அரிசி உட்பட அத்தியாவசிப் பொருட்களை  நியாயமான விலையில சதொச நிறுவனம் வழங்கி வருகின்றது. நுகர்வோரின் நன்மை கருதி  இன்று நள்ளிறவு முதல் (19) மீண்டும் அரிசியின் விலையை குறைக்கப்படுவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோண் தெரிவித்தார். இன்று (19) வொக்ஸ்வல் வீதியில்…

Read More

தண்ணீர் பட்டியல் கட்டுவதற்காக உங்கள் வாக்குகளை இழந்து விடுவது தவரு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

அரிசிக்காக, ஒருமாத மின்சார மற்றும் தண்ணீர் பட்டியல் கட்டுவதற்காக உங்கள் வாக்குகளை இழந்து விடுவது தான்சார்ந்த செய்யப்படுகின்ற அரசியல் துரோகம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் அஸ்ஙர் வித்தியாலயத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- வரவிருக்கும் உள்ளுராட்சி தேர்தல் வட்டார ரீதியில்…

Read More

மட்பாண்ட கைப்பணி வியாபார நிலைய திறப்புவிழா நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமிர் அலி

எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் துறை மையங்கள் உல்லாசப் பயணிகளை மையப்படுத்திய வேலைத் திட்டங்களாக கிராமிய பொருளாதார அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். தேசிய அருங்கலை பேரவையின் பேத்தாளை கருங்காலிச்சோலை மட்பாண்ட கைப்பணி வியாபார நிலைய திறப்பு விழாவும், உபகரணம் வழங்கும் நிகழ்வும் உற்பத்தி நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் தேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- உலகத்திலே மிகவும்…

Read More

இலங்கையின் தொழில் முயற்சியாண்மை பொருளாதரா மறுசீரமைப்பில் பாரிய பங்களிப்பை நல்கும்… அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 

இலங்கையின் தொழில் முயற்சியாண்மையை சர்வதேசத்துடன் இணைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் அரசின் திட்டத்தை இலக்காகக் கொண்டு கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) செயற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷட் பதியுதீன் தெரிவித்தார். தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் 2017 ஆம் ஆண்டுக்கான மேல்மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

பிரபாகரனை பார்த்தது போலவே என்னையும் பார்க்கிறார்கள் – ரிசாத் பதியுதீன்

கடந்த காலத்தில் சிங்கள மக்கள் மத்தியில் பிரபாகரனை எந்த நிலையில் வைத்து பார்த்தார்களோ அதே நிலையில் இன்று என்னையும் பார்க்கிறார்கள் என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற பாராளுமன்ற சிரேஷ்ட உரை பெயர்ப்பாளர் எம்.எம் ராஸிக் எழுதிய ஹெம்மாத்தகம முஸ்லிம்களின் வரலாறு சமூகவியல் நோக்கு எனும் நூலின் அறிமுக விழா நேற்று கொழும்பில் உள்ள ஜம்மியதுஸ் சபாப் கேட்போர்கூட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுபோதே அவர்…

Read More