Headlines

அரிசித் தட்டுப்பாட்டை நீக்க 5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி பண்டிகையை முன்னிட்டு 500 அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை குறைப்பு. ஊடகவியலாளர் ,மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு 

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை  கருத்திற்கொண்டு ௦5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும், இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டு ஒருதொகுதி அரிசி வந்து சேர்ந்துள்ளதாகவும்  கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்புத் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும்  செயற்பாடுகளை விளக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் இந்த தகவலை வெளியிட்டார்….

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் உதவியின் மூலம் மன்/பிச்சவாணிப நெடுங்குள மக்களுக்கு விடுகள் வழங்கி வைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் உதவியின் மூலம்   மன்/பிச்ச வாணிப நெடுங்குள மக்களுக்கு அளக்கட்டில் 45 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது ..!! பயனாளிகளுக்கு வீடு கொடுக்கும் நிகழ்வில் கெளரவ அமைச்சர் அவர்களின் மன்னார் மாவட்ட இணைப்புச் செயலாளர் சகோதரர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் மற்றும் மீள் குடியேற்ற செயலனியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சகோதரர் முஜீப் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆரம்ப கால போராளிளான சகோதரர் வஸீம் பதுறுத்தீன்…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் பணத்தை போதைக்காக செலவழிப்பது அதிகமாக காணப்படுகின்றது. பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பணத்தை போதைக்காக செலவழிப்பது அதிகமாக காணப்படுகின்றது. இதனை தடுக்கும் முயற்சியில் தாய்மார்கள் செயற்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் போரதீவுப்பற்று செயலகப் பிரிவிலுள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பெரியபோரதீவு கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும்…

Read More

முல்லைத்தீவு முஸ்லிம் சிவில் போரத்திற்கும் வட மாகாண சபை உறுப்பினர் யாஸீன் ஜவாஹிருக்குமிடையிலான சந்திப்பு!

முல்லைத்தீவு முஸ்லிம் சிவில் போரத்திற்கும் (MMCF) வட மாகாண சபை உறுப்பினர் யாஸீன் ஜவாஹிருக்குமிடையிலான சந்திப்பு கடந்த வாரம் புத்தளம், நிலாமல்டி மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது முல்லைத்தீவு முஸ்லிம்கள் மீள்குடியேறுவதில் எதிர்கொள்ளும் சவால்கள், காணிப் பிரச்சினைகள், வாக்காளர் பதிவில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், தமிழ்- முஸ்லிம் உறவைக் கட்டியெழுப்பும் அதேவேளை முஸ்லிம்களின் உரிமைகளை ஜனநாயக வழியில் பெற்றுக் கொள்ளுதல், எம்.எம்.ஸி.எப். இன் எதிர்கால நடவடிக்கைகள் முதலான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. இதன்போது போரம் விடுத்த வேண்டுகோள்களை வட மாகாண…

Read More