Headlines

பெண்களின் நலன்களைப்பேண பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். மக்கள் காங்கிரஸின் மகளிர் அணி தேசிய ஒருங்கிணைப்பாளர்

பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை  நடைமுறைப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணிக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தரும், உளவள ஆலோசகருமான இல்ஹாம்  மரிக்கார், கொலஜ் ஒப் எல்த் கல்லூரியின் பணிப்பாளர் டாக்டர் எம்.எச்.எம். முனாசிக் ஆகியோரும்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியில் கிண்ணியா மாஞ்சோலை பாலம் புனரமைப்பு

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு MEH மஹரூப் வீதி புனரைபின்போது உடைந்து சேதமடைந்த மாஞ்ச்சோலை பாலம் மாணவர்கள் உட்பட பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்துவந்த நிலையில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில்கள் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களின் உதவியுடன் நிதி பெறப்பட்டு வேலைகள் RDA தொழிநுட்ப உதவியுடன், கிண்ணியா…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசுவது ஒரு புற்றுநோயாக காணப்படுகின்றது என அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசுவது ஒரு புற்றுநோயாக காணப்படுகின்றது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு மண்டபத்தடி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசி எதையும் சாதித்து…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி முயற்சியால் அங்குராணை மக்களுக்கு பாலம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அக்குறாணை, மினுமினுத்தவெளி பிரதேசத்திற்குச் செல்வதற்கான ஆற்றைக் கடப்பதற்கு ஒரு பாலம் இல்லாமல் பல சிரமங்களை எதிர்கொண்ட மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் பாலம் அமைக்கப்படவுள்ளதை முன்னிட்டு பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லாமல் அக்குறாணை மற்றும் மினுமினுத்தவெளி ஆகிய கிராமங்களை சேர்ந்த இரண்டு கிராம மக்கள் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துப் பாதைகள் இல்லாததாலும் அக்கிராமங்களுக்குச் செல்லும் பிரதான பாதையூடாகச் செல்லும்…

Read More

மியன்மார் அகதிகளை இலங்கையில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக இனவாதிகள் மோசமான பிரசாரம். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசாத் சாலி வலியுறுத்து.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இந்த நாட்டில் வாழும் சூழல் இல்லாத போது, மியன்மார் அகதிகளை இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து நாங்கள் குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக இனவாதிகள் போலியான வதந்திகளைப் பரப்பி தற்போது இருக்கின்ற அற்ப சொற்ப நிம்மதிகளையும் குலைக்கப்பார்ப்பதாக தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆசாத் சாலி கண்டனம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் மரைக்கார், ஆசாத் சாலி, அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகியோர் ரோஹிங்கியோ அகதிகளை இங்கு கொண்டு வந்து குடியேற்ற…

Read More