Headlines

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு  அமைச்சர் ரிஷாட்  அழைப்பு

யுத்தத்தின் கோரத்தழும்புகளாக மாறியிருக்கும் காணாமல்போனோர் பிரச்சினை, நீண்டகாலமாக  சிறைகளில் வாடிக்கிடக்கும்  அப்பாவி இளைஞர்களின் விடுதலை, காணிகளைப் பறிகொடுத்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் அவலம் போன்ற இன்னொரன்ன தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக  கட்சி, பிரதேச, இனவேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் ‘நிலமெவகர’ ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் இன்று காலை (28)…

Read More

மாந்தை உப்பு கூட்டுத்தாபனத்தின் சுற்றுலா விடுதி கட்டிட திறப்புவிழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நிர்மாணிக்கப்பகவுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் அந்நிறுவனத்தின் சுற்றுலா விடுதி கட்டிட அங்குரார்ப்பண நிகழ்வு மன்னாரில் இன்று (27) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்  கலந்து கொண்டார். மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம் எம் அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஸ்டேன்லி…

Read More

பொலனறுவையில் நிர்மானிக்கப்படவுள்ள வர்த்தக மையத்தின் இடத்தை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சென்று பார்வையிட்டார்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் பொலனறுவையில் நிர்மானிக்கப்படவுள்ள வர்த்தக மையத்தின் இடத்தை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சென்று பார்வையிட்டார். பொலனறுவை மாவட்டத்தின் கதுறுவெல பிரதேசத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 324 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் வர்த்தக மையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளதென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்….

Read More

குருநாகல்  பள்ளிவாசல்கள் மீதான  தாக்குதல்களின் பின்னணியை கண்டறிந்து நடவடிக்கை எடுங்கள். பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து.

குருநாகல் மாவட்ட பள்ளிவாசல்கள் மீது கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் தாக்குதல் குறித்தான பின்னணியை கண்டறிவதோடு  சூத்திரதாரிகளையும் கைது செய்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் வடமேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் அபெயசிறி குணவர்த்தனவிடம்  வலியுறுத்தியுள்ளார். இன்று காலை (27/08/2017) பிரதி பொலிஸ்மா அதிபரிருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர், இன்று அதிகாலை நாரம்மல பொல்கஹயாய ஜும்மா பள்ளிவாசல் மீது இடம்பெற்ற கல்வீச்சு தாக்குதலை விபரித்ததுடன் இது தொடர்பில்…

Read More

பிரதி அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கிராமத்தில் ஆற்றிய உரை

அரசியல் தலைவர்கள் மக்கள் மத்தியில் வெறுமனே துவேசத்தை தூண்டுபவர்களாக இருந்தால் அவர்களில் நீங்கள் விழிப்புடன் இருந்து கொள்ள வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் வித்தியாபுர கிராமத்தில் அமைக்கப்படவுள்ள நெற்களஞ்சியசாலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நெல்சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் தலைவர் திசநாயக்க தலைமையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- இந்நாட்டில் தமிழ் மக்கள் பட்ட…

Read More

பொது அறிவு பரீட்சை 4ம் திகதி திங்கட் கிழமையாக மாற்றம்.  

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொது அறிவுப் பரீட்சையை எதிர் வரும் 4ம் திகதி திங்கட் கிழமை நடாத்துவதென தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 3ம் திகதி நடாத்துவதென அறிவிக்கப்பட்டிருந்த போதும் அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாகயாகையால் 4ம் திகதி திங்கட் கிழமை நடாத்துவதென தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. ஊடகப்பிரிவு

Read More