அமைச்சர் ஹக்கீம் சிலமணிநேரம் செலவிட்டிருந்தால் தம்புள்ளை பள்ளிவிவகாரத்தை எப்போதே தீர்த்திருக்கலாம். அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு
100நாள் நல்லாட்சியில் நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் றவுப் ஹக்கீம் 1மணி நேரத்தையாவது செலவழித்திருந்தால் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை இலகுவில் தீர்த்திருக்க முடியும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்றிரவு (22.08.2017) அமைச்சரின் உத்தியோகபூர்வ முகநூல் வழியாக இடம்பெற்ற மக்கள் குரல் நேரடி கேள்வி பதில் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை தீர்த்துவைக்குமாறு, இந்தவிடயத்துடன் சம்பந்தப்பட்ட அப்போதைய நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சர் றவூப் ஹக்கீமிடம்…
