நுகர்வோர் அதிகாரசபையின் சுற்றிவளைப்பில் இவ்வாண்டு ஜூன்வரை 46.7மில்லியன் தண்டப்பணம்
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்றிருப்பதாக அதிகாரசபை வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் கீழ் அதிகார சபையின் தலைவர் ஹஸித்த திலகரட்ன அவர்களின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016ம் ஆண்டு…
