தமிழ் – முஸ்லிம் நல்லுறவை சீர்குலைக்க எத்தனிப்போருக்கு இடமளிக்க வேண்டாம். மன்னாரில் அமைச்சர் றிஷாட்
தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கடந்த காலங்களில் இவ்விரண்டு சமூகங்களிற்கும் இடையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் தற்போது படிப்படியாக மறைந்து வருவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் அமைச்சரின் முயற்சியினால் ஜப்பானிய அரசின் நிதிவுதவியுடன் அமைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான விடுதி திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டார். பாடசாலை அதிபர் மாஹிரின்…
