நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து பொறுமை கொண்டால் எங்களுடைய எதிர்பார்ப்புக்கள் எல்லாம் வெற்றி பெறும் என .எம்.எஸ்.எஸ்.அமீர் அலி
இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து பொறுமை கொண்டால் எங்களுடைய எதிர்பார்ப்புக்கள் எல்லாம் வெற்றி பெறும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்திற்கான பொலிஸ் நிலைய நிரந்தர கட்டிடம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- இந்த நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை சமூகம் நுகரக்கூடிய அளவுக்கு பொலிஸ் நிலையம் மற்றும் காணி விடுவிப்பை கொண்டு…
