Headlines

மீள்குடியேற்ற செயலணி ஊடாக இடம்பெயர்ந்தோர்,பாதிக்கப்பட்டோர் தகவல் திரட்டல்

மீள்குடியேற்ற செயலணி ஊடாக நீண்டகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் முகமாக தகவல் திரட்டும் விண்ணப்ப படிவத்தை மீள்குடியேற்ற செயலணி வெளியீட்டு உள்ளது. குறிப்பாக மோதல் காரணமாக 1990ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு நிண்டகாலமாக உள்ளக இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மக்கள் தொகை கணிப்பில் பங்குபற்றுவோர் தொடர்பாக பதிவு செய்யப்பட உள்ளது. எனவே நிங்களும் இடம்பெயர்ந்தோர் என்றால் கீழ் உள்ள விண்ணப்படிவங்களை பூர்த்தி உரிய…

Read More

முன்னாள் அமைச்சர்  மன்சூரின் மறைவு முழு நாட்டுக்கும் பேரிழப்பு அமைச்சர் றிஷாட் அனுதாபம்

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின்  மறைவு முஸ்லிம் சமூதாயத்துக்கு மட்டுமன்றி முழு நாட்டுக்கும் பேரிழப்பாகும் என்று அவரது மறைவு குறித்து அமைச்சர் றிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியில் கவலை தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது. நல்லதோர் அரசியல் பரம்பரையின் பின்புலத்தில் வாழ்ந்த, மர்ஹூம்  மன்சூர் முஸ்லிம் சமூக அரசியலுக்கு முன்னோடியாக விளங்கியவர். கல்முனை முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் மர்ஹூம்  கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் மருமகனான இவர,; அரசியலில் பல்வேறு பரிமாணங்களை வகித்தவர். பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, மாவட்ட அமைச்சராக, வெளிநாட்டுத்…

Read More

ஆனந்த சாகர தேரருக்கெதிராக வழக்குத் தாக்கல் அமைச்சர் றிஷாட் ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவிப்பு

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் செயலாளர் ஆனந்த சாகர ஹிமி இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இரத்தமலானை சதொச களஞ்சியசாலைக்கு ஒருகொடவத்தையில் இருந்து கொண்டுவரப்பட்ட கொள்கலனில் கொக்கேயின் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்துடன் சதொசவையும் தன்னையும் சம்பந்தப்படுத்தி சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின்…

Read More

அமீர் அலி தலைமையில் குழாய் கிணறு மற்றும் பாடசாலை சுற்றுமதில் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கெவிளியாமடு மற்றும் மங்களகம பகுதிக்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் மூலம் குழாய் கிணறு மற்றும் பாடசாலை சுற்றுமதில் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிளியாமடு பகுதியில் அமைக்கப்பட்ட குழாய் கிணறை மக்கள் பாவனைக்கு கையளிப்பட்டதுடன், மங்களகம மகா வித்தியாலயத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான வேலைகளும் ஆரம்பித்து வைத்தார். கிராமிய பொருளாதார…

Read More