Headlines

மீளகுடியேறியுள்ள முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை தீர்க்க வழிவிடுங்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

  (ஊடகப்பிரிவு) முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளை தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து கொண்டு இருக்காமல், அவர்களை நிம்மதியாக வாழ்வதற்கு வழிவிடுங்கள். என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களின் ஒருவருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். முல்லைத்தீவு கச்சேரியில் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனின் வழிநடத்தலில் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், காதர் மஸ்தான் எம்பி ஆகியோர் தலைமையில் இன்று (10.07.2017) இடம்பெற்ற இந்தக்…

Read More

அதிகாரங்களை தக்கவைப்பதற்காக தமிழ் – முஸ்லிம் உறவு மலரவேண்டுமென்ற மனோபாவம் மாறவேண்டும் – நிந்தவூரில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

(சுஐப் எம் காசிம்) அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பதவிகளை அடைய வேண்டுமெ ன்பதற்காகவும் தமிழ்  – முஸ்லிம் உறவு மேலோங்கவேண்டுமென்ற மனோபாவம் மாற்றப்பட்டு, இரண்டு சமூகங்களினதும் அடிநாதப்பிரச்சினைகளைத் தீர்க்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இனநல்லுறவு வழிசமைக்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறைமாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்;. சலீமின் 50வருட சேவையை பாராட்டும் விழாவும், ‘பொன்விழா காணும் சலீம்’  எனும் நூல் வெளியீடும் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற…

Read More

பொன்விழா கண்ட சிரேஷ்ட ஊடகவியலாளார் கலாபூஷணம் ஏ.எல்.எம் சலீம் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்,

நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற,  ஊடகத்துறையில் பொன்விழா கண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதித் தலைவருமான கலாபூஷணம் ஏ.எல்.எம் சலீம் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் கெளரவ அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார், இன்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி, கட்சியின் பிரதித்தலைவரும் இலங்கை  அரச…

Read More

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இணைத்தலைவர் தலைமையில் ஆரம்பம்!!!

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இணைத்தலைவர்களான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், வட மாகாண முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன், வன்னி மாவட்ட உறுப்பினர் காதர் மஸ்தான், அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் (10) நடைபெறுகின்றது. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சார்ள்ஸ் நிரமலநாதன், வடமாகாண அமைச்சர்களான டெனீஸ்வரன், அனந்தி ஸ்ரீதரன், உட்பட வடமாகாண சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகளும்…

Read More

ஒட்டமாவடி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கழகங்களுக்கு உதைபந்து வழங்கும் நிகழ்வு

இளைஞர்கள் விளையாட்டுடன் தொடர்புடையவர்களாக தங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் போதையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கலாம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஒட்டமாவடி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கழகங்களுக்கு உதைபந்தாட்டம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை ஒட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் கழக தலைவர் எஸ்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்! இன்று எமது இளைஞர்கள் மத்தியில்…

Read More

வடக்கில் முஸ்லிம்கள் குடியேற சி.வி.யே தடையாக உள்ளார்;அப்துல்லா மஹ்ரூப் 

வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு அதிகாரத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது தடையாக உள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் சபையில் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தனிநபர் பிரேரணை மீதான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், இன்றைய (நேற்று) ஒழுங்குப் பத்திரத்தில் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான…

Read More

அமீர் அலி தலைமையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (10) பிரதேச செயலக செயலாளர் உதயஶ்ரீ அவர்களினால் இறைவனக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் வியாழேந்திரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீநேசன், யோகேஷ்வரன் ,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்ணம், கிருஷ்ணப்பிள்ளை , கருணாகரன், பிரசன்னா, மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிசாசலுக்கு ஜனாசா வாகனம் கையளிப்பு

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிசாசலுக்கு ஜனாசா வாகனமொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனால் பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனிபாவிடம் நேற்று (09) கையளிக்கப்பட்டது. லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் சிராஸ் மீராசஹிப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவர் ஏ.எம்.ஜமீல் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகளும் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Read More