Headlines

எதைச்செய்தாலும் வேற்றுக் கண்ணோட்டத்தில் நோக்கும் ஒரு கூட்டத்தினாலேயே நமது சமுதாயத்துக்குக் கேடு.

  மினுவாங்கொடை நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் ரிஷாட்.   -ஊடகப்பிரிவு நாம் எதைச் செய்தாலும் அதனை வேற்றுக் கண்ணோட்டத்தில் எப்போதும் நோக்கும் நமது சமுதாயத்தில் இருக்கும் ஒரு கூட்டத்தினாலேயே நமக்கு தொடர்ச்சியாக பாதிப்புக்கள் நேரிடுகின்றதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பெண் எழுத்தாளர் ருவைதா மதீன் எழுதிய “குடிபெயறும் கனவுகள்”கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக இன்று (02) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்….

Read More

சிறியளவிலான உணவு உற்பத்தி முயற்சிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு

சிறியளவிலான உணவு உற்பத்தி முயற்சிகளுக்கு  நிதியுதவி வழங்கும் நிகழ்வு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று காலை 2017.05.02  நடைபெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்திச்சபை,சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுடன் தனித்தனிஒப்பந்தங்களை மேற்கொண்டு இந்த உதவு தொகையை வழங்கியது.

Read More

ரஷ்யா பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக அமைச்சர் ரிஷாட்.

ரஷ்யாவின் டாவோஸ் என அழைக்கப்படும் பிரசித்திபெற்ற சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கலந்து கொள்ளுமாறு அந்த நாட்டின் பிரதிப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம், 2 ஆம், 3 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. இன்று (02) காலை கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு விஜயம் செய்த இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர்  அலெக்ஸாண்டர் கார்ச்சேவ் அமைச்சர்…

Read More

நீறு பூத்த நெருப்பாகி இருக்கும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தள்ளிப்போட வேண்டாம். வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்.

ஊடகப்பிரிவு மனசாட்சி, மனித நேயம் மற்றும் இறையச்சம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சமூகங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்படும் பிரச்சினைகளும் வெகுவாக குறையும் என்று அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (30) இடம்பெற்ற் ஜனாதிபதி நடமாடும் சேவையில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் தலைமையில் பல கட்சிகள் கூட்டாக இணைந்து…

Read More

பூர்வீக நிலங்களை இழந்து தவிப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மேதின செய்தியில் அமைச்சர் ரிஷாட்.

-ஊடகப்பிரிவு தொழிலாளர் வர்க்கத்தினரின் நல உரிமைகளுக்காகப் போராடும் இன்றைய நாளில் வடக்கு கிழக்கில் வாழ்வுரிமைகளையும் பூர்வீக நிலங்களையும் பறி கொடுத்து வீதிகளிலே தவிக்கும் அப்பாவி மக்களின் விடிவுக்கு வழி கிடைக்க ஒருமித்து குரல் எழுப்புதுவது அனைவரதும் கடமையாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மே தினத்தையெட்டி அவர் விடுத்திருக்கும் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, மே தினம் என்பது வெறுமனே அரசியல் கட்சிகளினதும் தொழிலாளர் அமைப்புகளினதும் ஜனரஞ்சக நிகழ்வாக உருமாறிவிட்ட இந்தக்…

Read More

மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்தர பிரகடனம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி முடிவு

ஊடகப்பிரிவு மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்தர வர்த்தமனிப் பிரகடனம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை ஆராயவென சுயாதீன குழுவொன்றினை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த குழுவில் உள்ளடக்கும் வகையில் பெயர் குறிப்பிட்ட பிரதிநிதி ஒருவரை தந்துதவுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு கோரியுள்ளது. அமைச்சின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன கையெழுத்திட்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எழுதியுள்ள…

Read More