Headlines

தேசிய மீலாதுன் நபி விழா யாழ்பாணத்தில். அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

சுஐப் எம் காசீம். தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் நடாத்த படும் என  அமைச்சர் றிஷாட் பதியுதீன் த்ரிவித்தார்.இன்று(08/04/2017)  யாழ்ப்பாணத்தில், அரசாங்க அதிபர் தலைமையில் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் இன்னொரன்ன பிரச்சினைகள் தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தேசிய மீலாதுன் நபி விழாவின் மூலம் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களால் மக்களுக்கு இன்னும் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் கலாசார மேம்பாட்டை விருத்தி செய்ய உதவும் எனவும்…

Read More

இறக்காமத்தின் துயர் துடைத்த அமைச்சர் றிசாத் – மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி

உணவு ஒவ்வாமை காரமாக இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் நேற்றைய தினம் சிகிச்சை பெற்று வந்த சுமார்ஆயிரத்திற்கும் அதிகமாக நோயாளர்களில் பெரும் எண்ணிக்கையானோர் சுகமடைந்து வருவதாக வைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாங்காமம் கிராமத்தில்உள்ள முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் வழங்கப்பட்ட உணவு நஞ்சடைந்தமையால் அவ் உணவினை உட்கொண்டமூவர் மரணடைந்ததுடன் ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுகவீனமுற்ற நிலையில் அம்பாறை மாவட்டத்திலுள்ளவைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தனர். இவ்வாறு வைத்திய சிகிச்சை பெற்று வந்த…

Read More

புறக்கோட்டை சந்தையில் பொருட்களுக்கு எந்தத்தட்டுப்பாடும் இல்லை. பரப்பப்படும் வதந்திகளில் உண்மை இல்லையென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

ஊடகப்பிரிவு பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக மீண்டும் பரப்படும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லையென்றும், சந்தையில் பொருட்கள் தாராளமாகவும் நியாயமாகவும் இருக்கின்றதென்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (07) காலை புறக்கோட்டை சந்தைக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அங்குள்ள வர்த்தக நிலையங்களில் கள நிலவரங்களை அறிந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் செயலாளர் சிந்தக லொக்குஹெட்டி, லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர்…

Read More

ACMCயில் 250 பேர் இணைவு: கல்முனையில் 16 கட்சிக் கிளைகள் ஸ்தாபிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கிளைகளை கல்முனைக்குடியில் ஸ்தாபிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது. கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கல்முனைக் குடியில் 16 கிளைகளை அமைப்பதற்குரிய குழுக்கள் தெரிவு செய்யப்பட்டன. இவ்வேளையில் 250 பேர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் புதிதாக அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டனர். இவ்வைபவத்தில் கட்சியின் தவிசாளரும்…

Read More

1AC பாடசாலை 1AB பாடசாலையாக தரம் உயர்த்தம்

மன்னார் தாராபுரம் அல் மினா பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றை வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்களின் முயட்சியினால் 1 பாடசாலையாக காணப்பட்ட தாராபுரம் அல் மினா பாடசாலையானது 1 பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது அதுமட்டுமல்லாமல் உயர்தரத்தில் விஞ்ஞான, கணித துறையினை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் வெளி மாவட்டங்களில் சென்று படித்துவரும் சந்தர்ப்பத்தில் தற்போது விஞ்ஞான, கணித துறையும் இந்த பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது…

Read More

ரிஷாத் பதியுதீனை சீண்டிப்பார்ப்பது, மடத்தனமான செயல்

அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எதிர்கட்சி வரிசையில் அமர்த்திப் பார்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால ஆசைபட்டால் ஜனாதிபதியும் அதே வரிசையில் அமர நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனை சீண்டிப்பார்க்க நினைப்பது இந்த நல்லாட்சி அரசின் மடத்தனமான செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். முசலி விவகாரத்தினால் எழுந்துள்ள முரண்பாடு தொடர்பில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவற்றைக் குறிப்பிட்டார். இது…

Read More

நுரைச்சோலை வீட்டுத்திட்டம், அமைச்சர் ரிஷாட்டின் பத்திரம் தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

சுஐப் எம் காசிம் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி அரேபிய “வரத்” அமைப்பின் நிதியுதவியுடன் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மாணிக்கப்பட்டு மூடப்பட்டுக் கிடக்கும் வீடுகளை மீண்டும் பயனாளிகளுக்கு கையளிக்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் தொடர்பில் அடுத்த அமைச்சரவையில்  இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். நேற்று (04) அமைச்சரவை கூடிய போது இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் சுற்றுச்சூழல் அறிக்கையின் காலதாமதம் காரணமாக அடுத்த அமைச்சரவையில் இதற்கான…

Read More

வில்பத்து விவகாரம்: ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம் ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை

வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு மூத்த அரசியல்வாதியும் தேசிய ஒருமைப்பாடடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சருமான ஏ எச் எம் பௌசி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். வில்பத்து பிரச்சினை தொடர்பில் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்முனைக் கூட்டத்தில் பேசிய பலர் வில்பத்துப் பிரதேச பிரகடனம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட்டினை விமர்சித்துப் பேசியதனை தொலைக்கட்சியில்…

Read More

புறகோட்டையில் முகக்கிறீம் கடைகள் இரண்டு சீல் வைப்பு

-அமைச்சின் ஊடகப்பிரிவு புறக்கோட்டையில் அமைந்துள்ள இரண்டு வர்த்தகக் கடைகளில் 11 லட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியுள்ள சுமார் 3800 மேற்பட்ட முகத்துக்கு பூசும் கிறீம்களை நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் இன்று காலை (03) கைப்பற்றினர். இந்த கிறீம்களை கொண்டிருந்த டியுப்களில் விலைகளோ, காலாவதியாகும் திகதியோ, உற்பத்தி செய்யப்பட்ட திகதியோ, வியாபார பதிவிலக்கமோ குறிப்பிடப்படாது அவை விற்பனை செய்யப்பட்டு வந்ததனாலேயே அதிகாரசபை அதிகாரிகள் இதனைக் கைப்பற்றியதாக தெரிவித்தனர். ஒரு வர்த்தக நிலையத்தில் 2500 கிறீம் டியுப்களும் இன்னொரு வர்த்தக…

Read More

சொந்த இடத்துக்கான போராட்டத்தில் ஈடுபடும் முள்ளிக்குள மக்களை சந்தித்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

மன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு சொந்தமான சுமார் 980 ஏக்கர் விஸ்தீரனம் கொண்ட காணியை விடுவித்துத்தர வேண்டும் என கோரி அந்த பிரதேச மக்கள் தொடர்ச்சியான மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மக்களை, அகில மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் இன்று மாலை (01) சந்தித்து நிலமைகளை கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது முன்னால் நாடளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய முன்னனியின் தலைவருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம்,…

Read More

எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை. மறிச்சிக்கட்டியில் அமைச்சர் ரிஷாட்

சுஐப் எம் காசிம் முசலி பிரதேச மக்களின் நில மீட்பு போராட்டத்தை எனது சொந்த போராட்டம் என இனவாத நயவஞ்சகர்களுக்கு நமது சமூகத்தில் உள்ள கயவர்கள் காட்டிக்கொடுத்து, மக்களின் உண்மையான போராட்டத்தை மலினப்படுத்துவதற்கு துணை போகின்றார்கள் என்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னர் மறிச்சிக்கட்டி பள்ளிவாசலுக்கு முன்னால் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (01) மாலை சந்தித்த பின்னர் அமைச்சர் அங்கு உரையாற்றினார். அமைச்சர் மேலும்…

Read More

புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பில் சாதகமான நடவடிக்கை ஜனாதிபதி செயலக உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

சுஐப் எம் காசிம் வில்பத்து வடக்கை மையப்படுத்தி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலால் எழுந்துள்ள பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்த மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் பொருத்தமான, தீர்க்கமான முடிவை ஜனாதிபதி வழங்குவார் என ஜனாதிபதியின் செயலாளர் பி பி அபேகோன் இன்று (31) மாலை உறுதியளித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கிய பின்னர், அவர்…

Read More