Headlines

காத்தான்குடி ஹோட்டல் திறப்பு விழா:  சிறப்பு விருந்தினராக பிரதி அமைச்சர் அமீர் அலி

நீச்சல் தடாகம், ஜிம் சென்றர், தங்குமிடம் போன்ற வசதிகளுடன் கூடிய விடுதி திறப்பு விழா நேற்று 10.02.2017 ஆம் திகதி உரிமையாளர் அல்ஹாஜ் முபீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ அமீர் அலியும் கலந்து சிறப்பித்தார்.

Read More

முன்னாள் பிரதி அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் சமஷ்டி நூல் வெளியீட்டு விழா

முன்னாள் பிரதி அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் சமஷ்டி நூல் வெளியீட்டு விழா நேற்று 10.02.2017 ஆம் திகதி அக்கறைப்பற்று கடற்கரையில் இடம்பெற்றது. இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கத்தளாய் கிளைக் காரியாலயத் திறப்பு விழா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கத்தளாய் கிளைக் காரியாலயத்திறப்புவிழாவில் இன்று (11-02-2017)அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார். இந் நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் பிரதித் தலைவர் ஜமீல், Dr.ஹில்மி மஹ்ரூப் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Read More

வடக்கு,கிழக்கில் லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பயிற்சிப்பட்டறை

-முஹம்மட் ஜஹான்- லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ சபைக்கூட்டம் அண்மையில் இந்தியாவின் சென்னை நகரில் நிறுவன தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹீப் தலைமையில் இடம்பெற்றது தொடர்பாக நேற்று எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த முகாமைத்துவ சபைக்கூட்டத்தில் பணிப்பாளர்கள் கலந்து கொண்டு லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் தலைவர் தெரிவித்தார். வடக்கு,கிழக்கில் பயிற்சிப்பட்டறை மற்றும் விற்பனை நிலையங்களை திறப்பதற்கும் முகாமைத்துவ சபை அனுமதி வழங்கியுள்ளது என்றும்…

Read More

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகசபை கூட்டம்

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகசபை கூட்டம் கடந்த 06.02.2017 ஆம் திகதி இந்தியா, சென்னையில் இடம்பெற்றது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் (இலங்கை) தலைவர் சிராஸ் மீராசாகிபு மற்றும் இயக்குனர்கள் குழு ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில்  இலங்கை,அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

Read More

அக்குரஸ்ஸை இஸ்லாமிய கலாசார வைபவத்தில் உரையாற்றிய ARM ஜிப்ரி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ARM ஜிப்ரி, அண்மையில் அக்குரஸ்ஸையில் நடைபெற்ற இஸ்லாமிய கலாசார வைபவமொன்றில் ‘பிள்ளைகளின் கல்வி மற்றும் நடத்தை மேம்பாட்டில் பெற்றோரின் பங்களிப்பு ‘ எனும் தலைப்பில் உரையாற்றினார்..

Read More

பா.உ. நவவியினால் மேற்கொள்ளப்படவுள்ள திகழி கிராமத்தில் வடிகான்களை அமைக்கும் செயற்திட்டம்

திகழி மைதானம் உட்பட, திகழி கிராமத்தில் மழைகாலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வடிந்தோட செய்வதற்கான வடிகான்களை அமைக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களினால் இச்செயற்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் முதற்கட்ட பணியாக கல்பிட்டி பிரதேச செயலாளருக்கு வடிகான்களை அமைப்பதற்கான செலவீனத்தைக் (Estimate) கோரி அண்மையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Read More

பா.உ. இஷாக் ஹாஜியாரின் சொந்த நிதியிலிருந்து பண்டார பொத்தான  ஊரின் சகல பாதைகளும் புனரமைப்பு

அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஷாக் ஹாஜியாரின் சொந்த நிதியிலிருந்து பண்டார பொத்தான  ஊரின் சகல பாதைகளும் புனரமைக்கப்படுகின்றன.

Read More

2017.02.08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள்

01.2016ம் ஆண்டு 14ம் இலக்க காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை (அமைத்தல், நிர்வகித்தல் மற்றும் பணிகளை நிறைவேற்றல்) சட்டத்தில் திருத்தம் செய்தல் (விடய இல. 05) 2016ம் ஆண்டு 14ம் இலக்க காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை (அமைத்தல், நிர்வகித்தல் மற்றும் பணிகளை நிறைவேற்றல்) சட்டமானது, பாராளுமன்றத்தில் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காரியாலயத்துக்கு வழங்கப்பட்டுள்ள பணியினை நிறைவேற்றுவதற்காக வேண்டி ஏதேனும் நபர் ஒருவரோ அல்லது அமைப்புடனோ ஒப்பந்தம் ஒன்றில்…

Read More

சம்பா கிலோ 80/- பச்சையரிசி கிலோ 70/- நாடு கிலோ 72/- பாவனையாளர் அதிகார சபை இன்று விலை நிர்ணயம். அதிகரித்து விற்போருக்கு உரிய கடும் நடவடிக்கை என ரிஷாட் எச்சரிக்கை.

-சுஐப் எம் காசிம் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான ஆகக் கூடிய சில்லறை விலையை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை இன்று (8) நிர்ணயித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியாகின்றது (வர்த்தமானி இலக்கம் 2005/24) வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்று தொடக்கம் இந்த விலை அமுல் படுத்தப் படுவதாக பாவனையாளர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த விலை நிர்ணயத்தின் படி நாட்டரிசியின் ஆகக் கூடிய சில்லறை விலை கிலோ ரூபா 72/- ஆகவும்,…

Read More

கல்விக்கு கைகொடுத்தோர் என்றுமே போற்றப்படுகிறார்கள் வெள்ளவத்தை நிகழ்வில் அமைச்சர் றிஷாட்!!!

(சுஐப் எம் காசிம்) ஒரு சமூகத்தின் உயிர் நாடியாக விளங்கும் கல்விக்கு கைகொடுத்தவர்கள் என்றுமே அந்த சமூகத்தால் மறக்கப்பட்ட வரலாறு கிடையாதென்றும் அந்த வகையில் வசதி படைத்தவர்கள் கல்விக்காக வாரிவழங்குவது சிறந்த பண்பாகுமெனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு ஹமீட் அல் ஹ_சைனியா கல்லூரியின் எதிர்கால அபிவிருத்தி குறித்த வேலைத்திட்டம் தொடர்பான கூட்டமொன்று கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்றபோது அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் நிதியமைச்சர் ரவிகருணாநயக, எம்பிக்களான முஜிபுர்…

Read More